Saturday 11 April 2015

சாதித்தது என்ன?

சாதித்தது என்ன?
சிறுகதை உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் அவர்கள் இயற்கை எய்தி விட்டார். ஊடகங்களாலும் ஊடக வீதிகளில் உலவியவர்களாலும் உயர்த்தப்பட்டவர்.
வாசிப்போரின் மனதை மகிழ்விக்கும் வகையில் சிறுகதைகளைப் படைத்தவர் அவர். பொதுவுடமை உணர்வுகளில் ஊறிப்போனவர் என்று பேசப்பட்டாலும், காங்கிரசில் இணைந்து இந்திய தேசியம் என்று இல்லாத ஒன்றை இதயத்தில் பதிவு செய்து கொண்டவர்.
இந்தத் துணைக்கண்டத்து காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் கூட திராவிட இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் இழிவாகவே சித்தரித்தார்கள். அதில் ஜெயகாந்தனுக்கு முதலிடம் தர வேண்டும்.
அண்ணாவுக்கு இலக்கியம் தெரியாது, அவர் படைப்புகள் இலக்கியத் தரம் வாய்ந்தது அல்ல என்றது மட்டுமல்ல மிக இழிவான சொற்களாலும் அர்ச்சனை செய்தார். அவருடைய எழுத்துக்கள் அக்ரகார வாசிகளையும் அவர்களை ஒட்டிய மனிதர்களையும் மிகவும் கவர்ந்தது.
எனினும், தமிழ் என்ற உணர்வோடு கலைஞர் அவர்கள் மிகப் பெரிய மரியாதையை வழங்கினார். பொருள் உதவியும் செய்தார் எனவும் நினைவு.
அவருடைய சிறுகதைகள் பிரளயம், உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், மனிதன், சில நேரங்களில் சில மனிதர்கள், சங்கர மடம் என்றெல்லாம் படித்திருந்தாலும் தேவன் வருவாரா என்னும் சிறுகதை என்னை ஈர்த்தது உண்டு.
தி.மு.கவின் மீதம், தி.மு.க வின் தமிழ் மீதும் வெறுப்பு கொண்ட ஜெயகாந்தன் அவர்கள் பின்னர் தி.மு.க. அறக்கட்டளை வழங்கிய பாராட்டு, மரியாதை, விருதைப் பெற்றுக் கொண்டார்.
அண்ணாவும், அவரின் தமிழ் நடையும் அவரின் இலக்கியமும், எழுத்தில், பேச்சில், கவிதை நடையும் இந்த மண்ணில் மிகப் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. மாணவர்களை மேம்படுத்தியது. ஒரு மொழிப் புரட்சியை உருவாக்கியது. என்றும் காணாத வளத்தை, வாழ்வை தமிழர்களுக்கு வழங்கிய ஒரு ஆட்சியை உருவாக்கிக் காட்டியது.

ஜெயகாந்தனின் எழுத்தும் அவரது சிறுகதைகளும் ஏற்படுத்தியது என்ன? என்ற வினா சிந்திப்போர் சிந்தையில் தோன்றுவது இயல்பானதானே.

No comments:

Post a Comment