Saturday 30 August 2014

தி.மு.க.வின் திருப்பணிகள்

திராவிட முன்னேற்றக் கழகம் இதன் சுருக்கம் தான் தி.மு.. இதனை நாம் இப்படியும் கூறலாம். ஆம் தித்திக்கும், முதிர்ந்த கனி என்று. அத்தகைய சுவையை, நலனை தமிழ்நாட்டில் உருவாக்கிய உன்னத இயக்கம் தி.மு.. தி.மு..வின் சாதனைகளை இரு வேறு நிலைகளை விளக்கலாம்.

அது தோன்றிய நாளில் இருந்து ஆட்சிக்கு வருவதற்கு முன் வரை அதன் பணிகளையும், சாதனைகளையும் ஒரு பகுதியாகவும், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழிலிருந்து இன்று வரை தொண்டாற்றும் தூய பணிகளையும், அதன் பயன்களையும், சாதனைச் சரித்திரத்தையும் விளக்கி விவரிக்கலாம்.

திராவிடர் கழகத்தில் இருந்த போது அண்ணா நினைத்திருந்தால் அப்படியே அந்த இயக்கத்தை தன் தலைமையின் கீழ் கொண்டு வர முயன்றிருக்கலாம். ஆனால் பெரியாருக்கும், அவரது கொள்கைகளுக்கும் துணை செய்கின்ற வகையில்தான் அவர் தனது பணிகளைத் தொடங்கினார் - தொடர்ந்தார் - சிறந்தார். அய்யாவின் கொள்கைகளில் இருந்து வேறுபடவில்லை. மக்களை அடிமைப் படுத்தி அறியாமையில் ஆழ்த்தியவர்களை நோக்கிப் பாயும் அறிவுத் துப்பாக்கியாய் அய்யாவின் இயக்கத்தோடு இணைந்து பாயும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக தி.மு.. இயங்கும் என்றார்.

இந்த இனிய நிலையிலிருந்து தனது இறுதி நாள் வரை அவர் இடறி விழவே இல்லை. அய்யாவின் கொள்கைக்கு எழுச்சியும், வளர்ச்சியும் ஊட்ட இளைஞர் பட்டாளத்தை அய்யாவின் பக்கம் ஈர்த்தளித்தார்.

தொடர்ந்து அந்தத் தூய தொண்டை தான் இருக்கும் வரை இனிமையுடன் இதய சுத்தியுடன் தொடர்ந்தார்; மகிழ்ந்தார். ஆட்சிக்குமுன்னிருந்த தி.மு..-வின் பிரச்சாரங்கள், கருத்து பரப்பும் கலை வடிவங்களில் அய்யாவின் கொள்கைகளை வலியுறுத்தியது.

இளைஞர்களின் இதயங்களில் உலகையே ஓவியமாய் வரைந்து காட்டியது. கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் ஆகிய துறைச் செய்திகளை கல்லூரிகள் தருவதைக் காட்டிலும் கனிச் சுவையாய் மாலை நேரக் கூட்டங்களில் வழங்கி மகிழ்ந்தது தி.மு..

ஏழை, எளியோர், கல்வி கிடைக்காதோர், கலை வடிவம் காணாதோர், சிந்தனை வகை எதுவென்று எண்ணிப் பார்க்க ஏதும் தெரியாதோர், இளைஞர், மகளிர், இளம் மாணவ, மாணவியர், சிறுவர்கள், உழைப்பைத் தவிர வேறெதுவும் பெற வகையறியாதோர் எல்லாம் கழகக் கூட்டங்களில் பொழிந்த சொல் மழையால் அறிவாளர் பெற்றதெல்லாம் பெற்று வளர்ந்தனர். மகிழ்ந்தனர். இது உலக வரலாற்றில் அரசியல் கட்சிகளில் மிகப் பெரும் புதுமையும், சாதனையுமாகும்.

மக்களின் விழிப்புணர்வுக்குப் பாடுபட்ட தி.மு.. மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், வாழ்வில் வளம் பெறுவதற்கும், உயர்வு காண்பதற்கும், அறிவு பரப்பம் பணிகளோடு, அரசின் கவனத்தை ஈர்க்கும் அடுக்கடுக்கான அறப்போராட்டங்களை நடத்தியது.

மக்களாட்சி கொள்கையின் மாசில்லாக் கோட்பாடுகளை மக்களிடம் பதிக்க தன்னை முழுமையாகத் தந்தது தி.மு.. நியாயத்திற்காக போராடினாலும், இந்த நாட்டுச் சட்டம் என்ன சொல்கிறதா அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டது தி.மு.. ஒரு சனநாயக நாட்டில் மக்கள் நலனுக்காக கொடுமைகளை ஏற்று தன் இனிய தோழர்களின் உயிர்களை இழந்தது தி.மு..

தீண்டத்தகாதவர்கள் என்று எப்படி தன் மக்களையே இந்து மதம் கருதி இழிவு செய்ததோ அத்தகைய மனோபாவத்தை கொண்டிருந்த ஓர் அரசை எதிர்த்துப் போராடிய தி.மு.. தன் தோழர்களை இழந்தது போன்று உலக அளவில் யாரும் இழந்திருக்கவில்லை.

பலநூறு பல்கலைக் கழகங்கள் செய்ததை விட நூறு மடங்கு பகுத்தறிவு பண்பாட்டு உணர்வுகளை, செழுமைகளை உருவாக்கியது தி.மு.. இளைஞர் உலகத்தை எழுச்சியுறுச் செய்து ஏற்றமிகு உணர்வுகளை, கொள்கைகளை அவர்களது உள்ளத்தில் ஏற்றி வைத்து ஒவ்வொரு நாளும் அவர்களது உயர்வுக்கு உழைத்தது தி.மு..

இருட்டறையில் கிடந்த தமிழர்களை தம் எழுத்தாலும், பேச்சாலும் ஒளியேற்றி வெளிச்சப் பாதையில் வேக நடை போட வைத்தது தி.மு.. பொருள் வள வாழ்வை தமிழர்கள் பெறுவதற்கு போராடி உழைத்த தி.மு.. அகவாழ்விலும் தமிழ் ஆளுமை செய்யும் ஆக்கமிகு பணிகளை அடைமழை போல் ஆற்றியது. கதை, கவிதை, கட்டுரைகள், புதினங்கள், புதுமைச் செய்திகளை எழுத்திலும், பட்டி மண்டபம், வழக்காடு மன்றம், தலைப்புகள் தந்து சொற்பொழிவுகள், சிறப்புக் கூட்டங்கள், மாநாடுகள் என்று பேச்சுக் துறையில் எவ்வளவு எழுச்சியும் உணர்ச்சியும் ஊட்ட முடியுமோ அவ்வளவும் செய்து தமிழர்களின் உள்ளத்தை தமிழ் மயமாக்கியதால் 1965ல் உலகம் காணாத மொழிப் புரட்சியை தமிழ் மண்ணில் உருவாக்கியது தி.மு..

ஆட்சிக் காலத்தில் தி.மு.. அமர்வதற்கு முன் சரியாக 18 ஆண்டுகள் அறநெறிப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக சர்வாதிகார நாடுகளில் விடுதலை வீரர்கள் பட்ட கொடுமைகள், வேதனைகளைத் தாங்கி தமிழர்களின் எழுச்சிக்குப் போராடியது தி.மு..

தூய்மையான தி.மு..வின் கொள்கை, கோட்பாடு, இலட்சியங்கள், திட்டங்கள், செயல்முறைகள், உயர்வான உள்ளப் போக்கு, உழைப்பு ஆகியவற்றை உள்வாங்கிய தமிழர்கள் தங்களது வளர்ச்சி பாதுகாப்புக் கருதி 1967ல் திமுக ஆட்சி அமைக்க ஆதரவளித்து வாழ்த்தினர்.

அண்ணாவின் தலைமையில் அமைந்த ஆட்சி அறிவார்ந்த வழியில் நடை போடத் தொடங்கியது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் நில அமைப்பு, ஆற்றோர நாகரீகங்கள், ஆட்சியமைப்பு, வளர்ச்சி நிலை, வறுமை நிலை, ஆங்காங்கே உள்ள கலை, இலக்கியம், கவிதை, கல்வி, வரலாறு மக்களின் மனநிலை, வாழ்வியற் கோட்பாடுகள் ஆகிய அனைத்தையும் மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்த அறிவாளர் திலகங்களாகத் திகழ்ந்த அண்ணாவும், தம்பிகளும் தமிழர்களின் நிலையுயர்த்தி நெஞ்சம் மகிழ வைக்க, மணக்க வைக்க என்னென்ன செய்யவேண்டுமெனதிட்டமிட்டு செயல்படத் தொடங்கினர்.

முதலில் முகமே இல்லாது, முகவரியில்லாதிருந்த இந்த மண்ணிற்கு, தமிழ்நாடு என்று பெயரிட்டு தமிழர்களை பெருமை கொள்ள வைத்தார்கள். தமிழை ஆட்சி மொழியாக்கி தன்மான உணர்வை வெளிப்படுத்தினர்.

தந்தை பெரியாரின் அரவணைப்பில் வளர்ந்து கொள்கை பயின்று ஆற்றல் பெற்ற அண்ணாவும் அவரது தம்பிகளும் சுய மரியாதை திருமணச் சட்டத்தை நிறைவேற்றி அமைச்சரவையை பெரியாருக்கு காணிக்கையாக்கி நெஞ்ச நிறைவு கொண்டனர்.

ஈராண்டுகளே ஆண்ட அண்ணா அவர்கள் எழுச்சி நாள் கொண்டாடினர். தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி, சேலம் இரும்பாலை, சேதுக்கால்வாய் அமைவதற்கும் கோரிக்கைகளை முன் வைத்து தமிழக தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதோடு தொழில்கள் சிறக்க தொழில் பொருட்காட்சியும் நடத்தினார். இன்றைய சென்னை அண்ணா நகர் கோபுரத்தை சாட்சியுமாக்கினார்.

தமிழ் சிறக்க உலகத் தமிழ் மாநாடு நடத்தி உலகில் எங்குமில்லாத தாய்மொழிப் பற்றை உணர்த்தி உலகோரை வியக்க வைத்தார். இயற்கை செய்த கொடுமையால் இவ்வுலகைப் பிரிந்த அண்ணா இன்றும் நம் நெஞ்சில் வாழ்கிறார்.

அண்ணாவின் தம்பி அய்யாவிடம் வளர்ந்த கலைஞர் அவர்கள் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன் உழைத்த வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தோடு, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதல் இன்றைய நாள் வரை அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டு ஆட்சித் திறன், தமிழர் ஏற்றத்தை எண்ணிப்பார்த்து எண்ணிப்பார்த்து இரவு பகல் பாராது விழித்திருந்து உழைத்து, வியத்தகுத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி தமிழர் குடும்பங்களில் மகிழ்ச்சியை, மன நிறைவை மலையெனக் குவித்தார்.

அவருடைய அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் சிந்தனை வெளிப்பாடுகளையும் அவர் இட்ட ஆணைகளையும், அறிவிப்புகளையும் அதில் உள்ளார்ந்து ஊடாடிய உணர்வுகளையும் ஒவ்வொரு கோணத்தில் ஆராய்ந்து பார்த்து விளக்குவதென்றால் ஒரு கோடி நூல் வேண்டும். அதில் வரும் ஒவ்வொரு வரியும் தமிழர் உயர்வொன்றே என்று ஒளி வீசி முகம் காட்டும்.

அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் இதுவரையில்லாத வகையில் தமிழர்கள் ஏற்றம் பெற்றனர். வாழ்வைத் துய்க்கும் உணர்வினையும் அதற்கான வளங்களையும் பெற்றனர். பல்லாயிரம் ஆண்டு காலமாக உயிர் பலியிட்டு, பொருட்களை படையலிட்டு உயிருருகி, உடல் வளைந்து இறைவனை - தெய்வத்தை - கடவுளை பல்வேறு பெயர்களை, நிலைகளையெல்லாம், நினைந்துநெஞ்சம் கனிந்து வணங்கிய நாளெல்லாம் பெற முடியாத நல்வாழ்வை, வளத்தை தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்த காலத்தில் பெற்றனர்.பேருவுவகை கொண்டனர். உணவு, உடை, உறைவிடம் மட்டுமின்றி உல்லாச வாழ்வுக்குரிய பொருள் வளத்தை கலைஞர் ஆட்சியின் திட்டங்களாலேயே அடைந்து அகமகிழ்வு கொண்டனர்.

இந்தியாவுக்கே வழிகாட்டும் பல்வேறு முன்னுதாரணத் திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி சாகாத சாதனைகளை நிறுவி நம் நெஞ்சில் நிறைந்தவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள்.

பேருந்து நாட்டுடமை, குடிசை மாற்று வாரியம், மகளிர் காவல் நிலையம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிர் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, மகளிருக்கு சொத்தில் சமபங்கு, கை ரிக்ஷாவை ஒழித்தது, மனிதன் மலம் அள்ளுவதை தடை செய்தது. இலவச மின்சாரம், இலவசக் கல்வி, அகன்ற சாலைகள், அதைப் பராமரிக்கச் சாலை பணியாளர், ஊர் நலப் பணியாளர், மே தின நினைவுச் சின்னம், மே தின விடுமுறை, நடுவணரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம், அரசுப் பணியாளர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு, பெரியார் சமத்துவபுரங்கள், செம்மொழித் தமிழ் என்று இந்தியாவே காணாத ஈடும் எடுப்புமற்ற, ஒப்புமையில்லாத திட்டங்களைத் தந்து செயல்படுத்தித் தமிழர்களை உயர வைத்தார் தலைவர் கலைஞர் அவர்கள். ஆக அண்ணாவும், கலைஞரும் தலைமையேற்று நடத்திய தி.மு.-வும் அதன் அரசும் இதயத் தூய்மையுடன் இந்த நாட்டை வழி நடத்தி வளப்படுத்தியிருக்கிறது.

தமிழ் - தமிழர் - தமிழன உணர்வு - மேம்பாடு என்ற வகையில் உழைப்பு, போராட்டம், உயிர்த் தியாகம் என்று எத்தனையோ இழப்புகளுக்குள்ளான உன்னதமான பொது நலத் தொண்டர்களின் பாசறைக் கோட்டம் தி.மு..

பொய்மை, பொல்லாங்கு, பொதுநலக்கேடு, அடுத்து கெடுக்கும் அற்ப புத்தி, துரோக நெஞ்சில்லாத தூயவர்களின் நேசமிகு பாசத்தோடு நெடுநாள் நடைபோடும் நேர்த்திமிகு பொது நல இயக்கம் தி.மு.. இப்படிப்பட்ட இனிய தி.மு..வை இலட்சிய நோக்கில்லாதோரும், இரண்டகப் புத்தி கொண்டோரும், தி.மு.கவை திருடிக் கொண்டு தனிக் கட்சி என்று செயல்படுகிறார்கள்.

அதுவும் அந்த இயக்கத்தை உருவாக்கி வளர்த்த இதயத் தூய்மையுள்ள அண்ணாவையும் அபகரித்து தி.மு.கவை திருடிப் பெயரிட்டு ஒரு கட்சியாக நடத்துகிறார்கள். அதைப்போல இன்னொரு சொல்லையும் சேர்த்துக் கொண்டு .தி.மு.. என்ற கட்சியை வைத்துக் கொண்டு தி.மு.கவுக்கு எதிரானவர்களுடன் கூட்டு வைத்து தி.மு.. கொள்கைகளுக்கு எதிரான இடையூறுகளைச் செய்கிறார்கள்.

சண்டியர்கள், சல்லாபிகள், சகோதரத்துவம் இல்லாதவர்கள், சாக்காட்டுப் பேர்வழிகள், மக்களை ஏய்ப்பதில் மகிழ்ச்சி கொள்பவர்கள் எல்லாம் தி.மு..-வையும், அண்ணாவையும் பயன்படுத்தி ஆதாயம் பெறுவதை, தன்னலத்திற்கு பயன்படுவதை இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கலாகாது. வணிகச் சட்டத்திலேய லேபிள் மோசடி என்பது மிகப்பெரிய குற்றம். ஒரு நிறுவனத்தின் பெயரை, முகவரியை, விளம்பர மாடலை சற்று திரித்து வெளியிடுவது என்பது குற்றமாகக் கருதப்படுகிறது.

லேபிள் மோசடியைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் விளக்கமாகவே எழுதியிருக்கிறார். ஒரு வணிக நிறுவனத்தின் பெயரை பயன்படுத்துவதே குற்றமென்றால் ஒரு நாட்டை, இனத்தை வழிநடத்தி மேம்படுத்தும் ஒரு இயக்கத்தின் பெயரை திருட அனுமதிக்கலாமா? தகுதியற்றவர்கள் தன்னலத்திற்காக அந்தப் பெயரைப் பயன்படுத்தலாமா? அதுவும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து பெயரை, பல காலம் செயல்பட்டு சிறப்புகள் எய்தி, நிறைந்த உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் பெயரை கண்டவர்களெல்லாம் பயன்படுத்த அனுமதிக்கலாமா?


இப்போதெல்லாம் திருடுபோன பொருட்களை மீட்டு உரியவர்களிடம் காவல்துறை ஒப்படைக்கிறது. அதைப்போல் திருடப்பட்ட தி.மு.கவையும், அண்ணாவையும் திருடர்களிடமிருந்து மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க பொறுப்புள்ளோர் முன் வர வேண்டும்

Thursday 28 August 2014

செம்மொழித் தமிழாய் ஒளிர்க!!!

தனது இளம் வயதில் தாய்மொழி ஏற்படுத்திய தாக்கம் இந்த 84 வயதிலும் இளமை குன்றாத உணர்வுக்கு உரமூட்டிக் கொண்டிருப்பதற்கு நமது தலைவர் கலைஞர் அவர்களே சான்று.அதிலும் அறிவார்ந்த கொள்கைகளோடு குடியேறிய தமிழ் இன்னும் அவருள் தழைத்து செழித்துக் கொண்டிருக்கிறது.

ஏறத்தாழ 2000 ஆண்டுகால அடிமை உணர்வில் - நிலையிலிருந்து தமிழ்ச் சமுதாயத்தின் பிரளய மாற்றத்திற்கு- பெரியார் உருவாக்கிய பெரும் படையில் ஒரு வீரனாக இணைந்து எழிற்மிழ் அண்ணாவின் அழகு தமிழை அப்படியே அடியொற்றி நடந்ததால் இன்று தமிழுக்கு அமுதனைய உயிராய் கலைஞர் திகழ்கிறார்.

தமிழருக்கு உயர்வு தரும் சுயமரியாதை இயக்க உணர்வுகளையும் சங்க காலத் கவிதை தரும் அருமையான எண்ணங்களையும், ஆற்றல்மிகு ""பா''த்திறத்தால் தமிழரிடையே பரவ விட்ட பாவேந்தர் படைப்புகளை தனது உயிரில், உணர்வில் பயிர் செய்ததால் இன்று உலக மகா கவிஞராய்த் திகழ்கிறார் கலைஞர் அவர்கள்.

ஈரோட்டுக்குருகுலத்தில் காலூன்றி கண் பதித்து கல்வி கற்ற காரணத்தால் எதையும் ஆய்வு நோக்கில், அறிவு நோக்கில் கூர்ந்து பார்த்து பயின்றதால் இன்று எல்லாத் துறைகள், நிலைகளில் ஏறு நடை போடுகிறார் இனிய தலைவர் கலைஞர் அவர்கள். இதழ்களில்,மக்கள் இதயங்கவர் இனிய திரைப்படங்களில்,அவர் வெளிப்படுத்திய தமிழ் இன்று வரை இளமை குன்றாது எழிலூட்டிக் கொண்டிருக்கிறது.


மேடையில் பற்பல நிகழ்வுகளில் மாலை நேரத்து பூங்காற்றைப் போல் மணம் தூவும் தமிழை மக்கள் நுகர வாரி வழங்கிய வண்ணமே இருக்கிறார். படைப்பிலக்கியத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. எழிலும், அழகும் இணைந்து அவர் படைப்பிற்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது.

சிறு கதைகள், தொடர் கதைகள், நாவல்கள், கட்டுரைகள், கடிதங்கள் எல்லாம் கனிச் சுவையூட்டும் கலைப் படைப்புகளாகவே காட்சி அளிக்கிறது.

எத்தனையோ உரை ஆசிரியர்கள், எத்தனையோ வகைகளில் குறளுக்கு உரை சொன்னாலும் கலைஞரின் குறளோவியம், குறள் உரை, வான் புகழ் வள்ளுவம் மட்டுமே எல்லார் மனதிலும் நின்று நிலை பெற்றிருக்கிறது.

அதுபோலவே சங்கத் தமிழின் சத்து நிறைந்த பாடலுக்கு பகுதி பகுதியாக பலர் உரை எழுதியிருந்தாலும், அந்தப் பாடலைப் போலவே உரைகளைப் புரிந்து கொள்வதும் கடினமாக இருக்கும். ஆனால் கலைஞர் புதிய வடிவங்காட்டி எளிதாய் புரிந்து கொள்ளும் பொருள் வளம் ஊட்டி சங்கத் தமிழை உண்டு, உவகை கொள்ள வைத்தார்.


அதைப் போலவே தொல்காப்பியத்தின் கடினமான சூத்திரங்களை சுவைபடக் காட்டி சுடரொளி ஏற்றி உலகோர் இலக்கண வெளிச்சம் பெற வைத்தார். இன்று செம்மொழியாய் தமிழை சிறந்தோங்கச் செய்திருக்கும் கலைஞர் அவர்கள் தமிழாக என்றும் தரணியில் ஒளிர்வார்! வாழ்க கலைஞர்!! 

Saturday 23 August 2014

கல்லில் பொறித்த உண்மை

கலைஞரை எதிர்த்து அவர்மீது ஏதாவது ஒரு களங்கம் சுமத்தி பொதுவாழ்வில் இருந்து அவரை ஒதுக்குவதற்கு ஆண்டாண்டு காலமாக யாராவது சிலர் உருவாகி வருகிறார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலே கூட பலர் முயலுகிறார்கள்.

முயன்றவர்கள் முனை முறிந்து முடங்கிவிட்டாலும் கூட தொடர்ந்து பலர் அந்த முயற்சியில் ஈடுபாடு காட்டிய வண்ணம் இருக்கிறார்கள். அதிலும் அவராலேயே உருவாகி வளர்ந்தவர்களையே அவருக்கு எதிராக உருவாக்கும் ஆற்றலை சில சக்திகள் பெற்றிருக்கின்றன.

அதற்குக் காரணம் என்ன? கலைஞரின் பொதுவாழ்வும் அவருடைய உள்ளத்தில் உறைந்திருக்கும் உணர்வும் அந்த சக்திகளுக்கு தெளிவாக புரியும். அதனால்தான் தொடர்ந்து அந்த தொண்டில் ஈடுபடுகிறார்கள், உழைக்கின்ற பெரும்பான்மை மக்களுக்கு உழைப்பதையே தனது இலட்சிய வேட்கையாக கொண்டவர் கலைஞர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதை பொறுக்காத அந்த சக்திகள் அவரை ஒழிப்பதற்கு ஓயாது முயல்கின்றன.

 இன்று இந்தியா முழுவதும் இடஒதுக்கீடு கொள்கை அலை வீசுகிறது. ஆனால் அந்தக் கொள்கையை பெற்றெடுத்தது நீதிக்கட்சி; அதை பேணி வளர்த்தது பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும்; அதை பெருமைக்குரிய பெருமாட்டியாக வளர்த்தது தானைத்தலைவர் கலைஞர்தான். இட ஒதுக்கீட்டின் வரலாற்றை நுட்பமாய் ஆராய்வோருக்கு அந்த உண்மை புரியும்.


.பி.யின் அலகாபாத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அவர் கொடுத்த குரல் அங்குள்ள சமுதாய பிரதிநிதிகளின் கவனத்தை முழுமையாக ஈர்த்தது. பின்னர் அந்தக் கொள்கை வெற்றிபெற பல முயற்சிகளை மேற்கொண்டார். பல்வேறு திசைகளில் திரிந்தோரை ஒருங்கிணைத்து ஜனதாகட்சியை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தார் . அந்த அரசில் மண்டல குழுவை அமைக்கும் நிலையை மேற்கொண்டார் அந்தக் குழுவின் அறிக்கையை செயல்படுத்த தேசிய முன்னணியை உருவாக்கினார். வி.பி.சிங்கின் மூலம் அந்த அறிக்கையை அரசாணையாக்கினார். அதற்காக கலைஞரும் வி.பி. சிங்கும் தங்கள் அரசையே இழந்தார்கள். கொண்ட கொள்கைக்காக கொற்றத்தையே இழந்தார்கள்.


மாநில அரசில் மட்டுமின்றி மத்திய அரசிலும் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நிலையாக நிற்க வேண்டுமானால் அதற்குத் துணையாக பிற்படுத்தப் பட்டோருக்கான ஒதுக்கீடும் கிடைத்தாக வேண்டும். அந்த இலக்கை நோக்கித் தான் நெடுங்காலமாகவே கலைஞரின் இத்தனை செயலும் சென்று கொண்டிருக்கின்றன என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் கலைஞரின் எதிரிகள்; உணராதோர் அவர் உழைப்பின் பயனை துய்ப்பவர்கள்.

துயரப் பட்டோருக்கான அவர் தொண்டு தொலை நோக்கோடு தொடர்வதால் தான் அவரை பலவீனப்படுத்தப் பல்வேறு முயற்சிகள் செய்யப்படுகிறன. செய்தி இதழாளர்கள் பலர் தங்களின் மேட்டுக்குடிக்குணத்தாலும் வாணிப நோக்கத்தாலும் அவருக்கெதிரான நிலையை மேற்கொள்கின்றனர். ஆனால் சிலர் அவருடன் இருந்தவர்கள், வயது வாராமலேயே தாய்மையடையும் ஆசையைப்போல் தகுதியில்லாமலேயே தலைவராகும் எண்ணத்தை வளர்த்ததால் இன்று சிறு சலசலப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

உள்ளத்தில் பதித்த கொள்கையும், கொள்கை வழிச் செயலும் தூயதாக இருக்கும்போது துரோகங்கள் முயற்சிகள் தோல்விகண்டு துவண்டு விடும். இதய சுத்தி இல்லாதவர்கள் எத்தகைய கொம்பனாக இருந்தாலும் எத்தனை கோடியை எங்கிருந்து பெற்று செலவழித்தாலும், தொண்டுள்ளத்தின் முன் தோல்வியைத்தான் தழுவுவார்கள்.


உண்மை உழைப்பாளிகளை அந்தக்கால கட்டத்தில் மக்கள் முழுமையாய் உணராது போயிடினும் வரலாறு தம் வாழ்த்துக்களை அவர்களுக்கு வழங்கிய வண்ணமே இருக்கும். காய்தல், உவத்தல் அற்ற கண்ணியமிக்க காவியப் போராளன் கலைஞரின் புகழ் விண்ணின் விளக்காகி என்றென்றும் ஒளி வீசி நிலைத்து நிற்கும் இது கல்லில் பொறித்த உண்மை