Saturday 5 September 2015

ஏழாம் அறிவு
கருத்துக்கள் பலவற்றையும், கண் கவர் காட்சிகளையும் மக்களின் உள்ளத்தில் பதிவு செய்யும் வகையில் பல்லாண்டுகளாக திரைப்படங்கள் பங்கெடுத்து வருவதைப் பார்க்க முடிகின்றது.
ஏடுகள், இதழ்கள், நூல்கள், இன்ன பிற ஊடகங்களைக் காட்டிலும் ஒளிரும் திரைப்படங்கள் நிறைந்து மக்களின் மனத்தில் இடம்பெற்று விடுவதைக் காணலாம்.
நாளெல்லாம் வெளிவரும் திரைப்படங்கள் நல்லதையே விளைவிக்கிறது என்று சொல்ல முடியாது என்றாலும், எப்போதாவது நல்லவையும் நிகழ்கிறது என்று ஓரளவு நிறைவு கொள்ள முடிகிறது.
ஆயிரம் பொருள்களுக்கு மேல் கண்டளித்து உலகை அகமகிழச் செய்த அமெரிக்காவின் மாமேதை தாமசு ஆஸ்வா எடிசனின் அரும்படைப்பு இந்த திரைப்படக் கருவியாகும்.
நாடுகள் தோறும் பல்லாயிரம் படங்கள் வெளி வந்து மக்கள் மனங்களில் பல்வேறு உணர்வுகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.
கலை, மொழி, கல்வி, பாவியம்,வரலாறு, அறிவியல் தொழில்நுட்பம் இன்ன பிற செய்திகளை வகை பிரித்து வாரி வழங்கும் வல்லமையைப் பெற்று வருகிறது திரைப்படத் துறை.
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என்றும் மக்களின் கனவுகளில், நெஞ்ச நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கிறது.
ஹாலிவுட்டின் சார்லி சாப்ளின், பாலிவுட்டின் சாந்தாராம், கோலிவுட்டின் கலைவாணர் ஆகியோரும் நெஞ்சில் நினைக்கத்தக்கவர்கள்.
தமிழகத்தில் திரைப்படத் துறையில் திருப்பு முனையை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா, அண்ணாவைத் தொடர்ந்து கலைஞர் உள்ளிட்ட நிறைய பேர் திரைப்படத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்தினர்.
புராண இதிகாசப் புனைவுகளை புகழ்பாடி வந்த திரைத்துறை பல புதிய வடிவங்களையும் தந்து மகிழ்விக்கிறது.
தற்போது வெளிவந்து அருஞ்செயல் (சாதனை) களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஏழாம் அறிவு திரைப்படம் ஓரிரு நல்ல செய்திகளைச் சொல்லி நம் கருத்தி(சிந்தை)ல் இடம் பெற்றிருக்கிறது.
தமிழரின் பாதுகாப்புக் கலையையும் மருத்துவ முறையையும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சீனத்தில் பரப்பிய புத்தரின் வழி நின்ற போதிதருமரை இங்குள்ள தமிழர்களிடம் தாக்கம் கொள்ள வைக்கின்ற அருமையான முயற்சி என்றே இந்தப் படத்தை பாராட்டலாம்.
நூற்றாண்டு கால திராவிட இயக்க பரப்புரைக்கு பின்னும், தம் இனம், மொழி, பண்பாடு, வாழ்வியற் செழுமைகளை இனம் கொள்ள இயலாமல் ஆரியத்தின் அடிமையாய் ஆழ்ந்து கிடக்கும் தமிழனிடம் இந்த ஏழாம் அறிவு சிறு தூண்டலை நிகழ்த்தினால் அதிலே நமக்கு நிறைவைத் தரும்.
நல்ல முயற்சி என்று நம்மை நினைக்க வைத்த இந்தப் படத்தில் இரண்டொரு சொற்றொடர்கள் நம்மை சினம் கொள்ள வைக்கிறது.
பரிந்துரையும், இட ஒதுக்கீடும் (கீஞுஞிணிட்ட்ஞுணஞீச்tடிணிண, கீஞுண்ஞுணூதிச்டிணிண) தான் திறமையாளர்களை வெளிநாடுகளுக்கு ஓட வைக்கிறது என்று வரும் சொற்றொடர் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களை உள்ளம் குமுறச் செய்யாதா?
அதுவும் இட ஒதுக்கீட்டில் கல்வி சுற்று உயர்ந்த இயக்குநரும், இடஒதுக்கீட்டின் காவல் அரணான ஓர் இயக்கத்தைச் சார்ந்த, தயாரிப்பாளரும் இதைச் சொல்வது வேதனையை விதைக்கிறது. ஆரியத் தாக்கம் இன்றளவும் எங்கும் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று ஆகும்.
மூலிகையின் ஆற்றலை அறிந்து அதை மருந்தாக மாற்றி நோய் நீக்குவது உடலில் உள்ள நரம்புகளின் இயல்வை உணர்ந்து அதை இயக்கி நலிவு நீக்கி உடல் நலம் பெறச் செய்யும் மருத்துவம் ஆகியவை தமிழன் தோன்றிய காலத்திலிருந்தே நிலை பெற்ற ஒன்றாகும்.
சிலம்பம், வர்வம் என்பது தமிழக கிராமங்களில் இன்றும் அரிதாக உயிர் வாழக் காணலாம். தொடு வர்வம், மெய்தீண்டா வர்வம், நோக்கு வர்வம், முடக்கு வர்வம் என்றெல்லாம் இருந்த மண் இந்த தமிழ் மண். அதில் ஒன்றிரண்டை இந்த ஏழாம் அறிவில் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.
இருப்பினும் இந்த படத்திற்கான வரவேற்பு தமிழனை உலகம் உற்றுப் பார்க்கிற இடத்திற்கு உயிர்த்தியிருக்கிறது என்பது மட்டும் உண்மையாகும்.
திரைப்படக் கலைஞர்களின் வாழ்வியல் ஒழுக்கமும், நிலையும், அந்த கலைஞர்கள் சிலரால் தமிழ் நிலம் பட்ட பின்னடைவும்,வேதனையும் அவர்களின் அரசியல் நுழைவால் விளைந்த அவலமும், அருவருப்பம், பண்பாட்டுச் சிதைவும், பாழ் நிலையும் பலவாறு எண்ணிப் பார்க்க வேண்டியது ஆகும்.



கல்லூரிகள் சோலையாகட்டும்
கல்லூரிகள், உயர்கல்வி பெறுகின்ற (கலா சாலை) கல்விக்கூடம் என்கிறார்கள். இளங்கலை, முதுகலை ஆராய்ச்சிக் கல்வி என்றெல்லாம் பயிற்சி தருகின்ற ஆய்வுக்கூடம் என்கிறார்கள். நாட்டு வளம் கூட்டுகின்ற நல்லறிஞர்களைத் தோற்றுவிக்கின்ற அறிவுக்கூடம் என்றும் அறைகின்றார்கள்.
துறைதோறும் ஆற்றலாளர்களை ஆக்குகின்ற அருமைமிகு கலைத்தோட்டம் என்கிறார்கள். மருத்துவர்களை, பொறியாளர்களை, அறிவுசால் அறிஞர்களை ஆற்றல்மிகு வடிவமைப்பாளர்களை அனைத்தும் போதிக்கும் ஆசான்களை படைத்தளிக்கும் பல்கலைக் கழகத்தின் கிளை என்று கல்லூரிகளைக் கூறுகிறார்கள்.
கல்லூரிக்குள் நுழைந்து வெளிவரும் போது பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.டி, எம்.சி.ஏ., எம்.பி.ஏ. என்றெல்லாம் பட்டங்களை தன் பெயருக்கு பின்னால் பெருமிதத்துடன் போட்டுக் கொள்ளும் நிலை காண்கிறார்கள்.
பெருமையும், பாரம்பரியமும் மிக்க இந்தியாவில் பல்லாயிரம் இரண்டொருவருக்கே கிடைத்தது. அதுகூட வாழ்க்கையை முன்நடத்திச் செல்லும் கல்வியாக இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளையர்கள் தந்த கல்வி அதுவும் அவர்களது மொழியில் வழங்கிய கல்வியில் தான், வேதம் தவழ்ந்து பூரித்த புகழ்மிகு புனித நாட்டின் புதல்வர்கள் புதுவாழ்வு கண்டார்கள்.
ஐரோப்பியர்கள் வழங்கிய ஆற்றல்மிகு செய்திகளும், கருத்துகளுமே இங்கு கல்விப் பொருளாக முன்வைக்கப் பெற்று இன்றுவரை கற்றவர்களுக்கு களிப்பூட்டும் வழிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
அனைத்துவகைக் கல்வி நுட்பங்களும் ஆங்கிலத்திலேயே வழங்கி சிந்தனைக்கூடம் முழுவதும் அடிமையாகி அன்னிய மொழியிடமே அடிமைப்பட்டுக் கிடக்கிறது. வாழ்க்கை, வளர்ச்சிக்கு வளத்திற்கு வழிகாட்டிய அந்த கல்வி இன்றுவரை இந்திய மக்களுக்கு 12 விழுக்காடு தான் கிடைக்கிறது. 350 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருக்கிறதாம் எல்லாரும் கல்லூரிக்கு செல்லவேண்டுமென்றால், ஏறத்தாழ மூன்றாயிரம் நான்காயிரம் பல்கலைக்கழகங்கள் வேண்டுமாம்.
இந்த முன்னூற்று ஐம்பது பல்கலைக் கழகங்களில் ஒன்றுகூட உலகத் தரத்திற்கு இணையாக இல்லையாம். காவியங்களும், கலைகளும் சான்றோர்கள் ஆசி வழங்கினாலேயே அனைத்தும் நிகழும் என்கிற கதைகள் உலவும் நாட்டில் கல்லூரி காணாதவர்களின் விழுக்காடு எண்பத்தி எட்டாகும்.
அந்த கல்லூரிக்குள் சென்று வருபவர்களின் சிந்தையை ஆய்ந்து பார்த்தால் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. கல்லூரி கல்வியின் அடிப்படையில் கற்றவனின் மனமும், நடப்பும் இருப்பதில்லை. புதுமைச் செய்திகளே கிடைக்காத தீவுப் பகுதியில் வாழ்பவர் போன்ற மனநிலையிலேயே படித்து பட்டம் பெற்றவர்கள் இருக்கக் கண்டு இதயம் அழுவதைக் காணலாம்.
மருத்துவக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்த முதுநிலை ஆராய்ச்சியில் உருவான மருந்துகளையும், முறைகளையும் கடைப்பிடித்து கடமையைச் செய்யும் மருத்துவர்களின் நிலை நமது நெஞ்சில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இல்லை.
விஞ்ஞானம் தந்த வியத்தகு நிலைகளை மக்களிடம் முடிந்தவரை விளக்கிச் சொல்ல வேண்டிய மருத்துவரின் நடைமுறைச் சிந்தனை நாட்டுப்புற வடிவிலேயே இருக்கக் காணலாம்.
மதம் சார்ந்த மாசுகள் நிறைந்த கதைப் பாத்திரங்களில் மனதை பதிய வைத்து மற்றவர்களுக்கும் அதை நிலைநிறுத்தச் சொல்கிறார்கள். மருத்துவர்களுடைய அறையைப் பார்த்தால் மருத்துவத்தை வழங்கிய மாமேதைகளின் படங்கள் இருக்காது. மாறாக சடையில் ஒன்று இடையில் ஒன்று என இரு பெண்களிடம் ஈடுபாடு கொண்டவனையும் அவனைப் போல பலப்பல பெண்களின் பால் இச்சைக் கொண்டவர்கள் படங்கள் இருக்கக் காணலாம்.
பதினெட்டு, இருபது ஆண்டுகள், கல்லூரி தந்த வாழ்க்கை முறையை அணுகாமல் இளமையில் விவரம் தெரியாத நாள்களில் பதிய வைத்த மதவாத கருத்துகளில் மனதை பதிய வைத்து வாழ்வது கற்றவர்களுக்கு அழகாகுமா?
இந்த நாடு ஒரு வித்தியாசமான நாடு என்றார் மாசற்ற சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் சொல்லிவிட்டு விளக்கமும் தந்தார்.
சூசூகல்வி கற்றால் முட்டாள்தனம் ஒழியும் என்று கருதினேன். ஆனால் கற்றவன் இங்கே இரட்டை முட்டாளாக இருக்கிறான். அறிவியல் வளர்ந்தால் மூடநம்பிக்கை ஒழியும் என்று கருதினேன். ஆனால் அறிவியலையும் மூடநம்பிக்கையோடு இணைத்துப் பார்க்கிறான். கலப்பு மணம் செய்தால் சாதி ஒழியும் என்று நினைத்தேன். ஆனால் கலப்புமணம் செய்தவன் எல்லாம் தனிச்சாதியாகி விட்டான்” என்றார். இதில் வேதனை என்னவென்றால் கல்லூரி சென்று பட்டம் பெற்றவர்கள் தான் இதில் முழுமையும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
இந்திய அளவில் இன்னும் நாற்பது விழுக்காடு பள்ளிகளை காணாதவர்களாகவே இருக்கிறார்கள். கற்றவர்கள் அதிலும் கல்லூரியில் கற்றவர்களில் சில விதிவிலக்குகளை தவிர மற்றவர்கள் மடமையில் குளித்து மகிழ்ச்சி கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். இங்கே உருவாகும் ஆசிரியரின் மனோபாவம் ஆக்கம் நிறைந்ததாக அறிவு சார்ந்ததாக இல்லை.
ஆங்கில வழக்கல்வி அடிமைகளை தோற்றுவிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதையும் விட்டுவிட்டால் அறிவியலைத் தரும் மொழிகளோ அந்த மொழியில் முறையோ இருப்பதாத் தெரியவில்லை.
பன்னிரண்டு விழுக்காடு கல்லூரியில் படித்தவர்கள் எண்பத்தெட்டு விழுக்காட்டினரோடு வாழ்கின்ற போது பெரும்பான்மை விழுக்காடே வெற்றிபெற நேரிடும். அதாவது படித்தவரை மற்றவர் பாழ்படுத்தும் நிலை நேரிடலாம்.
பல்லாயிரம் ஆண்டு பழைமைத்தன்மை இங்குள்ளோரை எளிதில் விட்டுவிடாது என்பதற்கோர் எடுத்துக்காட்டு அறிவியல் வழியில் கல்வி கற்று மருத்துவாரக, பொறியாளராக உருவாகி வெளிநாட்டில் வாழும் நிலைபெற்றோர் அவர்களுக்கு வாழ்வழித்த அறிவியலோடு உறைந்து வாழ்வது அர்த்தமற்ற ஆதாரமற்ற அறிவாய்வு நிலைகாணாத பல்வேறு உணர்வுகள் அவர்களின் உள்ளத்தை ஆளுமை செய்வதை அவர்சென்ற இடத்திலும் காட்டுகின்ற பல்வேறு காட்சிகள் நமக்கு உணர்த்துகிறது.
கல்வி என்பது அதுவும் கல்லூரிக் கல்வி என்பது அறிவு சார்ந்ததாக ஆய்வு சாரந்ததாகவே இருக்கும் இருக்க வேண்டும். கல்லூரி செல்பவர்களின் மாற்றம் என்பது நடை, உடைகளில் மட்டுமல்லாது மனதிலும், நடைமுறையிலும் மாற்றம் கொண்டதாக ஏற்றம் கொண்டதாக இருக்க வேண்டும். எதிரில் ஒளிர்கின்ற ஏந்திழையிடம் மட்டுமல்லாது கல்லூரி தரும் அறிவியல் உணர்வுகளின் ஈர்ப்பும், ரசிப்பும் இருக்க வேண்டும்.
பயன்படாத பழைமையில் பயணிப்பதை விட்டுவிட்டு பயன்மிகு புதிய பாதையில் நடந்திய உறுதிகொள்வதுதான் படித்தவர்களுக்கு அழகாகும்.
பள்ளிகள், பாடசாலைகள், அதனால் விளைந்த நன்மைகள் என்று எந்த ஆதாரமும் இல்லாத இந்த நாட்டில் ஐரோப்பியர்களால் உருவான கல்வியின் பயனால் களிப்புறும் வாழ்வைப் பெற்றிருக்கிறோம். அதுவும் குறைந்த விழுக்காட்டினரே பெற்றிருக்கிறோம். பெருகிவரும் மக்களுக்கு கல்வி வழங்க தூய தொண்டாற்ற வேண்டியிருக்கிறது.
கல்வி நிலையங்கள் தூய நிலைபெற போராட வேண்டியிருக்கிறது. கல்வி அடிமை நிலையிலிருந்து அறிஞர்களை விடுவிக்க வேண்டியிருக்கிறது. கல்வி கொள்ளையர்களின் கைச்சிறையிலிருந்து கல்விக் கூடங்களை மக்களின் நலன்காக்கும் அறச்சாலையாக்க வேண்டியிருக்கிறது.
ஏனெனில், இங்கே கல்வி என்பது வணிகமயமாக்கப்பட்டு விட்டது. வணிகத்தில் கொள்லை லாபம் பார்த்த கொடுமையாளர்கள் எல்லாம் கல்வியின் காவலர்களாகி விட்டார்கள்.
பத்துக்குப்பத்து வட்டி வாங்கியவனெல்லாம் பள்ளியில் தாளாளராகி விட்டார்கள். சாராயம் விற்ற குற்றவாளிகள் எல்லாம் சர்வகலாசாலை வேந்தராகி விட்டார்கள். கஞ்சி வணிகம் செய்தோரெல்லாம் கல்வித் தந்தையாகி விட்டார்கள்.  பொய் சொல்லியே பிழைப்பு நடத்தியவனெல்லாம் கல்வி நிலைய புரவலராகி வடிட்õரக்ள் இவர்களிடம் ஆசிரியரும், பேராசிரியரும், அறிவாளிகளும் அடிமையாகி கைகட்டி வாய்பொத்தி நிற்கும் நிலை காண்கிறோம்.
தொண்டாகக் கருதவேண்டிய கல்வி தொல்லையாகிப் போனது. சூழ்நிலைக்கேற்ப கொள்ளை இலாபம் அடிப்போர் கல்வி நிலையங்களில் தங்கள் கைவரிசை காட்டும் நிலை  காண்கிறோம்.
கல்லூரி என்பது வெறும் சொற்பயிற்சி பெறும் நினைவுக்கூடம் ஆகாமல் புதுப்புதுக் கருவிகளைக் கண்டறியும் கலைவளர் சோலையாக்க முனைவீர் என் வேண்டுகிறாம்.



பல்கலைக்கழகங்களின் பார்வைக்கு
பல்கலைக் கழகம் என்பது உயர் கல்வியை ஆய்வின் உச்சம் வரை அழைத்துச் சென்று மாணவர்களை உலகின் உயர் மனிதர்களாக ஆக்குகின்ற உன்னதமான கலைக்கோட்டம் என்பதை உலகம் மிக நன்றாக அறியும்.
அந்த அறிவுசேர் நிலையங்கள் இன்று உலகம் முழுவதும் பரவி பயனளிக்கிறது என்பது நாம் மகிழ்கின்ற ஒன்று ஆகும்.
ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு பகுதிகளில் அந்தந்த மண் வாசனையோடு அடுத்த நாடுகளின் உறவுகளோடும் பல்வேறு துறைகளின் பாடங்களை நடத்தும் பாடசாலைகளாகவும் திகழ்ந்திடக் காண்கிறோம்.
மேலும், ஆராய்ச்சித் துறைகளில் பலவேறு ஆய்வுகளை நடத்தி ஆக்கமிகு நிலைகளை உருவாக்கியதால்தான் உலகம் என்றும் காணாத வாழ்க்கையில் வளங்களைப் பெற்று மனித குலம் வானமளவு வளர்த்திருக்கக் காண்கிறோம்.
மருத்துவ விஞ்ஞானம், வேதியியல் விஞ்ஞானம், பொறியியலில் பலவேறு துறைகள் ஆகியவை வானளாவ  வளர்ந்து வியத்தகு நிலைகாட்டி மகிழ்விக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம் பல்கலைக் கழகப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழங்கள் ஆயிரத்தில் ஒன்று என்ற நிலையில் இல்லையென்று ஏடுகளில், இதழ்களில் வெடிக்கின்றபோது, இங்குள்ள பல்கலைக் கழகங்கள் கடமை தவறியதோ எனும் எண்ணம் இதயத்தில் தோன்றுகிறது.
தமிழ் சார்ந்த சிந்து வெளி நாகரிகங்கள் வாழ்ந்த மொகஞ்சதாரோ, அரப்பாவை உலகில் உள்ள பலவேறு பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்தபோது, சென்னை பல்கலைக்கழகம் கண்மூடி உறங்கியது எனும் குற்றச்சாற்றை முன்னர் பலர் கூறியது உண்டு.
அது மொகஞ்சதாரோ, அரப்பாவில் பதினெட்டு (18) மேடுகளில் இரண்டுதான் அகழ்ந்து எடுக்கப்பட்டு என்றும், மற்றவையும் அகழ்ந்தால் மேலும் எண்ணற்ற தகவல்கள் கிடைக்கும் என்றும், தமிழ்நாட்டில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றிய பின் அந்த இனிய கலைக்கூடம் கூட சிந்துவெளியின் எஞ்சிய சிறப்புகளை வெளிக் கொணர முயற்சிக்கவில்லை எனும் புகார்கள் நிறையவே இருக்கின்றன.
சூரிய வெப்பம் மிக நிறைய கிடைக்கின்ற இங்கு - அது பற்றிய ஆய்வுகளும் செய்முறைப் பயிற்சிகளும் பல்கலைக் கழகங்களால் தொட்டுக்கூட பார்க்கப்படவில்லை என்று பலர் வருந்துகிறார்கள்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் காற்றாலை மின்சாரம் பற்றிய பட்டப் படிப்பு தொடங்குவதாக வந்த செய்தி நம்மை மகிழ்விப்பது போல சூரிய ஆற்றல் மின்சாரம் பற்றிய படிப்பும், ஆய்வு நிலைகளையும் மற்ற பல்கலைக் கழகங்கள் மேற்கொண்டால் மகிழ்வின் எல்லை மேலும் நீளும் அல்லவா?
குறைந்த மக்கள் எண்ணிக்கை கொண்ட சப்பானில் 2000 க்கும் மேல் பல்கலைக்கழகங்கள் உண்டு என்கிறார்கள். ஆனால் நூறு (100) கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இங்கு நானாறு (400) க்கும் குறைவான பல்கலைக் கழகங்கள் உள்ளன என்பதும், அதுவும் உலகத்தரத்தில் ஒன்றுகூட இல்லை என்பதும் நாம் எங்கே நிற்கிறோம் என்று உள்ளம் வருந்துகிறது.
தமிழகத்தில் 1960க்கு முன்னர் இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. இன்று இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்த கல்லூரிகள் ஆயிரத்தைத் தாண்டி நீண்டு வரும் நிலை  காண்கிறோம். படிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு பல இலட்சங்களாகப் பெருகி வருகின்றன.
ஆயினும் மக்கள் கூட்டத்தில் படர்ந்த மாசுகள் அகன்றதாகத் தெரியவில்லை. மாண்புகள் வளர்ந்து சிறந்ததாக மணக்கும் காட்சிகளைக் காண முடியவில்லை. கற்றவர்கள் மத்தியில் சுவைக்கு உதவாத எண்ணங்களும், காட்சிகளும், கசப்பூட்டும் உணர்வுகளும் மாறியதாக மறைந்ததாக அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
ஆறு ஆண்டுகளில் தொடங்கி ஏறக்குறைய இருபது ஆண்டுகளில் பெறுகின்ற கல்வி, படிப்பறிவு பெற்றவனின் மனதில் உள்ள களையை, குறையைக் களைய முடியவில்லை. அறிவியல் சான்று தராத கருத்துகள் செய்திகளால் தன்னை சிறைப்படுத்திக் கொள்ளும் நிலைதான் இங்கு நீடிக்கிறது.
படிக்காதவன், பாமரன் அவன் என்றால் பலவித நம்பிக்கைகளை பதியம் போட்டு வளர்க்கலாம். நெட்டுரு செய்யலாம். படித்தவன் அதுவும் பல்கலைக் கழகம் வரை கல்வி கற்றவன் அறிவியலுக்கு மாறான ஆய்வு நெறிகளைத் தாண்டி ஆராய்ச்சி உணர்வுகளுக்கு எதிர்த்திசையில் செல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
வெள்ளையர் காலத்தில் உருவான சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முத்திரை பதித்த நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்திருக்கின்றன.
இராமச்சந்திர தீட்சதரின் சூசூதமிழர் தோற்றமும் பரவலும்” எனும் அருமையான கட்டுரை இங்கேதான் வழங்கப்பட்டது. பரிதிமாற் கலைஞரின் - பூரணலிங்கம் பிள்ளையின் தமிழ்ச் செம்மொழி எனும் சிந்தனை இங்குதான் கருத்துருப் பெற்றது. இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் இருந்திருக்கலாம்.
நீதிக் கட்சித் தலைவர்களின் முயற்சியால் இங்கு பல்வேறு பள்ளிகளும், கல்லூரிகளும் நிறையவே தோற்றுவிக்கப்பட்டன. அதன் பட்டியல் நீளும், அதில் குறிப்பிடத்தக்கது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
தமிழர்களுக்கு உயர் கல்வி வழங்க வேண்டுமெனும் தலையாய நோக்கத்துடனேயே அது தொடங்கப்பட்டது. ஆனால், சென்னைப் பல்கலைக் கழகத்தில் மிகச் சிறுபான்மையினருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வாய்ப்புகள் வழங்கப்பட்டதால் தமிழர்களுக்கு கல்வி பெருமளவு தரப்பட்டது. அதற்கு பிறகுதான் பார்ப்பனர் அல்லாதாரின் கல்வி முன்னேறத் தொடங்கியது. தமிழரின் உயர்வும், தமிழிசையின் செழிப்பும், வளர்ப்பும் வெளியே தெரிந்தது.
இன்று பலவேறு துறைத் தொடர்புடைய நிறைய பல்கலைக் கழகங்களோடு பல நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களும் உருவெடுத்து விட்டன.
ஆயினும், மனக் கருத்துகளிலும் உளவியல் நிலையிலும் பெரிய மாற்றம் கண்டிருக்கிறதா? இருந்தால் அதை பல்கலைக்கழகங்கள் ஆய்ந்து அதன் விளைவை அளவை விளக்கி வெளியிட்டிருக்கிறார்களா?
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் மன்றங்கள் நடத்திய நிகழ்வுகளில் பேரறிஞர் அண்ணா அவர்கள் சூசூஏ, தாழ்ந்த தமிழகமே” சூசூஆற்றோரம்” எனும் தலைப்புகளில் ஆற்றிய உரைகள் தமிழரின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் பயன்பட்டதோடு அந்தப் பல்கலைக் கழகத்திற்கும் புகழ் முத்திரை சூட்டியது.
இன்றுள்ள பல்கலைக்கழகங்கள் அந்த நிலையில் இருக்கிறதா? இருந்தால் மக்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறதா?
ஒவ்வொரு துறைக்கும் உரிய பல்கலைக் கழகங்கள் இங்கே இயங்குவது சரிதான். ஆனால் அந்த கல்விக் கூடங்கள் வாழ்கின்ற பகுதியின் மண் வாசனை, மொழி வழங்கும் பகுதியின் மண் வாசனை, மொழி வழங்கும் கருத்துக்கள், வாழ்வியல் கூறுகள், பழக்க கருத்துகள், வாழ்வியல் கூறுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் நிறை குறைகளை ஆய்ந்து அவர்களுக்கு நேர்வழி காட்டுவது என்பது அந்தக் கல்விக் கூடங்களின் கடமையாக வேண்டும். ஏனெனில், அங்கிருந்துதானே மாணவர்கள் வருகிறார்கள்.
கடந்த கால மாணவர்களைப் போன்று பொது நலனில் அக்கறையும் எழுச்சியும் இல்லை என்றும், பிழைப்பு மனோபாவத்துடன்தான் பாடங்கள் போதிக்கப்படுகிறதென்றும் ஏடுகளிலும், இதழ்களிலும் படிக்கின்றபோது இதயம் வலிக்கவே செய்கிறது.

அதுமட்டுமன்றி தான் பயிலும் கல்விக் கூடத்தின் பெருமை அங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு தெரியவில்லை என்பது இதயப் புண்ணை மேலும் குத்துவதாகவே இருக்கின்றது.

Thursday 3 September 2015

ஆய்வுகள் நிகழ்வுகள்


தமிழ் உலகில் தோன்றிய மொழிகளில் முதன்மையானது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாத நிலை தோன்றியது.

இருப்பினும் உலக நிகழ்வுகளை கணித்துச் சொல்லுகின்ற ஐக்கிய நாடுகளின் மன்றமொன்று அறைந்ததை நினைக்கின்ற போது நெஞ்சம் பதறுகின்றது.

ஆம், அடுத்து வரும் நூறு ஆண்டுகளில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் அழிந்து மறைந்து விடும் என்று அந்த அமைப்புக் கூறியிருந்தது.

மொழி தோன்றிய நாளிலிருந்து எளிமை, இனிமை, எழில், அழகு, இதய நிறைவு என்று எத்தனையோ தந்தாலும் பெருகி வரும் மக்கள் தொகையை வளமுறச் செய்யும் கருவிகளையும் கருவிகள் தந்து பொருள் குவிதலுக்குகந்த வகையில் தமிழ் தன்னை ஆயத்துப்படுத்திக் கொண்டதா என்றால் முற்றிலும் இல்லை என்பதுதான் முழு உண்மையாகும்.

அது மொழியின் குற்றமல்ல. அந்த மொழி பேசும் மக்களின், அந்த மக்கள் கூட்டத்தை வழி நடத்தும் பேராளர்களின் குற்றமாகும்.

தந்தை பெரியார் மொழியில் சொல்வதென்றால், தமிழ் ஓர் அறிவியல் மொழி. ஆங்கிலத்திலும் குறைவான வரிவடிவங்களால் அதை இயங்கச் செய்ய இயலும்.

அறிஞர் அண்ணா கூறியதை நினைவில் கொண்டால்.. மிகக் குறைந்த எழுத்துக்களால் எல்லாப் பொருள்களையும் எடுத்தெழுத முடியும். ஓரெழுத்து, இரண்டெழுத்து, மூன்றெழுத்து, நான்கெழுத்து மூலமே தொண்ணூறு விழுக்காடுச் சொற்கள் தமிழில் இருப்பதை அண்ணா எடுத்துக் காட்டுகிறார்.

உலக மொழிகளின் வேர்கள் அனைத்தும் தமிழ் நோக்கியே விரிவதாக ஆய்வாளர்கள் பலர் தங்கள் ஆய்வுகளின் முடிவாக முழங்குகிறார்கள்.

ஆக எல்லாச் சிறப்பும், இயக்க ஆற்றலும் இருந்தும் உலக மொழியாக உவகை தரும் வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் அது வளர்க்கப்படவில்லை என்பது கல் போன்ற உண்மையாகும்.

தொல்காப்பியும் கூறும் இலக்கண நுட்பங்கள், சங்க இலக்கியச் கவிதைகல் வழங்கும் இயற்கை ஆய்வு நெறிகள், உளவியலின் உள்ளுணர்வுகளை உற்று நோக்கி செயல்முறைப் பயிற்சிகளை செய்திருந்தால் சிந்தை மகிழும் நிலை தமிழிக்குத் தோன்றியிருக்கும்.

இயற்கையின் இயக்கம் என்பது வளர்ச்சியை தோற்றுவித்து முன்னோக்கி செல்லும் என்பதுதான். அதை மேலும், மேலும் மேம்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தமிழைக் கையாண்டவர்கள் நிலை தடுமாறி நேர்வழியை மறந்ததால் நெஞ்சினிக்கும் நிகழ்வுள் தமிழை விட்டு நெடுந்தொலைவு சென்று விட்டது.

எழில் மிகுந்த சங்க காலத் தமிழ்ச்சிந்தனை, இந்திய துணைக் கண்டச் சிந்தனையாக சிதைந்து சீரழியத் தொடங்கியது.

புராண இதிகாசப் புனைவுகள், தகுதியற்ற தனி நபர் வழிபாடு, மக்கள் மனதை ஆய்வுகள் நிறைந்த கூடமாக ஆக்குவதை விடுத்து அடிமை மடமாக ஆக்கும் கலை வடிவங்கள் எல்லாம் உணர்வை, மனதை கூர் மழுங்கச் செய்தது என்பது இமாலய உண்மையாகும்.

தொல்காப்பியர் உயிர்களின் அதன் உருவங்களை அறிவியல் முறையில் ஆய்ந்து சொன்னதை இன்றைய உயர் அறிவியல் கூட மறுக்கவில்லை. அணுவை அன்றே கண்டவர் நம் ஔவையார்.

கணியன் பூங்குன்றன் உரைத்த உலகம் ஒன்று என்பதையும், உலகமாந்தர் அனைவரும் ஓரிடத்தில் தோன்றிய உறவுக் கூட்டம் என்பதையும் தமிழில் தோன்றிய தலைசிறந்த சிந்தனையெல்லாம் உயர் அறிவாளர் யாவரும் உணர்ந்து உவந்து பாராட்டுகின்றனர்.

கதிரவனின் தீப்பிழப்பிலிலுந்து வந்து குளிர்ந்ததே இந்த நிலம் என்றுரைத்த சங்க கவிதையும், வளவன் ஏவா வானவூர்தி எனும் சங்க கவிஞனின் கற்பனை அல்லது யூகமும் தமிழ்ச் சிந்தனையாளர்கள் - அறிவாளிகள் - ஆய்வாளர்கள் மனதைத் தொட்டிருந்தால், ஆய்வுகள் தொடங்கி தொடர்ந்திருந்தால் தொழிற்புரட்சியும், அதன் தொடர்ச்சியான தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சியும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கேதான் தோன்றியிருக்கும்.

ஆனால் இங்கே நிகழ்ந்ததென்ன? தமிழ்ச் சிந்தனையை தவற விட்டு இந்தியச் சிந்தனையை இதயத்தில் கொண்டதால் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக மதம் சார்ந்த மவுடீகம் சார்ந்த இயல்பினர்களாகவே தமிழர்கள் வசித்தார்கள்.

இயற்கையை உற்று நோக்கி எதையும் ஆய்வுக்குட்படுத்திப் பார்க்கும் தமிழ்ச் சிந்தனையின் வழி மறந்ததால் எதையும் ஆய்வின்றி ஏற்றுக் கொள்ளும் இந்தியச் சிந்தனை தமிழிரைச் சிறை செய்தது.

கிரேக்கச் சிந்தனையாளர்களின் உள்ளத்தை ஊடுருவிப் பாருங்கள். ஏதன்ஸ் சாக்ரடீசை தன் இதயத்தில் ஏற்றி வைத்து நேசித்தாலும் பல இடங்களிலும் பிளேட்டோ, அவனில் இருந்து மாறுபட்டு முன்னேற்றக் கருத்துகளை முன் வைக்கிறார்.

பிளேட்டோவை பிதா மகனாகக் கருதும் அரிஸ்டாட்டில் அவனில் இருந்து வளர்ந்து ஆய்வு முறைகளை அள்ளி வழங்குகிறார். இங்கே இந்திய சிந்தனையாளர்கள் அல்லது மேதைகள், ஞானிகள், முனிவர்கள், ரிசிகளின் இதயப் பரப்பை, எண்ண ஓட்டத்தை எண்ணிப் பார்த்தால் ஆய்வு முறைகள் ஆழப் புதைக்கப்பட்டதாகவே தெரியும்.

இங்கே எதையும் ஆய்ந்து சொல்வது என்பது பொருந்தாச் செயல் (அபத்தம்) என்று சொல்லப்பட்டது. முன்னோர் சொன்னது எதுவென்றாலும் மறுக்கக் கூடாது. மறுத்தால் அது மாபெரும் தண்டனைக்குரியது என்கிறார்கள். இந்த இழிநிலை இன்று வரை இங்கு நீடித்த வண்ணம் இருக்கிறது.

வழி வழி மன்னர் முறை என்பது வல்லான் வகுத்த விதிமுறை என்பதை உணர மறுத்தார்கள். மன்னனின் வாயிலிருந்து உதிர்வதெல்லாம் வாய்மை என்றார்கள். பின் அவன் இறந்த பின் கடவுளாக்கி அடிக்கடி தோன்றுகின்ற அவதாரமாக்கி கோவில் கட்டி மக்களை அடிமை இருட்டறையில் அடைத்து வைத்தார்கள். இந்த உணர்வுகள் இன்னும் இங்கே கிளை விரித்து படர்ந்தவாறு இருக்கிறது.

சிந்தனையின் ஆய்வில் சிறகுகளை இந்தியச் சிந்தனை வழிவந்தோர் ஒடித்து உயிர்வதை செய்தார்கள். சிந்தனை என்பது தடைகளற்று சிறகடித்துப் பறக்க வேண்டும். அது இங்கே இயலாமற் போய் விட்டது.

ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள், அரிஸ்டாட்டிலின் அடிமைகளாய் அறியாமை இருட்டில் கிடந்த ஐரோப்பிய அறிஞர்களை, விழிப்புற செய்கின்ற வித்தையை வெளிப்படுத்தினான் அறிஞன் கலிலியோ கலிலி.

ஆம். அரிஸ்டாட்டில் ஒரு முட்டாள் என்றான். ஐரோப்பா அதிர்ந்தது. மதபீடம் மத யானையானது. ஆய்ந்து பாராது கலிலியோவை கண்டித்தது, தண்டித்தது.

அப்படியென்ன அரிஸ்டாட்டிலைப் பற்றி கலிலியோ சொன்னார்? ஆண்களுக்கு முப்பத்திரண்டு பற்கள் என்றும் பெண்களுக்கு முப்பது பற்கள் என்றும் அரிஸ்டாட்டில் சொன்னான். ஒன்றுக்கு இரண்டு மனைவி இருந்தும் எண்ணிப் பார்க்காமலேயே சொன்னதால் அதாவது பரிசோதிக்காமல் சொன்னதால் அரிஸ்டாட்டிலை முட்டாள் என்றான் கலிலியோ. அதன் விளைவு எல்லாத் துறைகளிலும் பரிசோத்து உண்மை காணும் ஆய்வு முறை வானளாவ வளர்ந்து உலகம் இன்று வளம் பெற்று மகிழ்கிறது.

ஆனால், இந்தியச் சிந்தனையென்பது எண்ண முதல் வாதமாகவே இருந்தது. இன்னும் இருக்கிறது. இங்கே விமர்சனம் என்பதே கூட ஆகாத ஒன்றாகவே பேசப்படுகின்றது. கடவுள், மதம், அது சார்ந்த பல்வேறு செய்திகளில் நதி மூலம், ரிஷி மூலம் பார்க்காதே என்றுதான் பறைசாற்றப்படுகிறது.

ஆனால், தமிழ்ச் சிந்தனை என்பது வளர் விதிகளுக்கு உட்பட்டது. ஒரு நல்ல நூலுக்கு பத்து வித விதிகளை வகுத்த நன்னூர் தமிழில்தான் தோன்றியது. ஒரு நல்ல பாடத்தை நல்ல மாணவனுக்கு, நல்ல ஆசிரியர், நல்லவிதமாக போதித்தால் தான் அது நல்ல பயன் தரும் என்று நன்னூல் கூறுகிறது. இது இன்றைய அறிவியல் விதிகளுக்கு உட்பட்டது.

தொல்காப்பியமும், குறளும், சிலம்பும் மூன்று குறிக்கோள்களின் வழியே வாழ்வின் எல்லாச் செய்திகளையும் சொல்லி மகிழ்விக்கிறது.

ஒரு நாவல் கொடியை நாட்டி வைத்து வாதத்துக் அழைக்க, கருத்துப் போர் செய்து தனது கொள்கையை நிலை நாட்டும் மணிமேகலை தமிழில்தானே வாதிட்டார்.

புராணம் இதிகாசம் இதன் புகழ் பாடும் இலக்கிய வடிவங்கள், அகவல், அந்தாதி, வெண்பா, விருத்தம், என்பதையெல்லாம் தில்லை தீட்சிகர், தேவராம் திருவாசகத்தை கோவிலில் பூட்டி வைத்தார்களே அதைப்போல் மறைத்து விட்டு, இன்றைய புது வாழ்வுக்குப் பயன்படும் பொருள்களையும் கருவிகளையும் பொறிகளையும் புதுப்பித்து நூல்களையும் அதற்குரிய ஆய்வினையும் விளக்கிச் சொல்லி வளம் சேர்க்கும் வழிவகைகளையும் சொல் வடிவங்களையும் தமிழ் அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கணித வல்லுநர்கள் கள ஆய்வு செய்து, நூல் வழங்கும் பல்வேறு எழுத்தாளர்கள் ஆகிய அனைவரும் தமிழ் வளர்ப்பது தங்கள் கடமை எனக் கருதி பள்ளி, கல்லூரி மாணவர்க, மாணவியருக்கு தமிழ் ஊட்ட முனைவர்களோயானால் ஐக்கிய நாட்டு மன்றத்தின் கருத்தை பொய்யாக்கலாம்.

அகம், புறம், அறம் பொருள் இன்பம் இயல் இசைக் கூத்து, அதிகாரம், அரண், மனை, அகழ், காவல் மரங்கள், காதல், வீரம், மானம், கருணை, கொடை, படைகுடி, கூழ் அமைச்சு, தூங்காமை கல்வி துணிவுடைமை, இயற்றல் ஈட்டல் காத்தல் வகுத்தல், ஈதல் இசைபட வாழ்தல், செய்க பொருளை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, போர் நெறி, பொதுச் சிந்தனை, என்றெல்லாம் மனித மூளை வகுத்த வாழ்வு நெறிகளுக்குள் இயைந் வாழ்ந்த தமிழன் எப்படி மதி மயங்கி மந்திரங்கட்குட்பட்டான்? மாயைகளுக்கு ஆட்பட்டான்? மதச் சிக்கலில் மாட்டிக் கொண்டான்? ஆய்வுகளால் மட்டுமே தெளிவு கிடைக்கும்.

இன்னும் சொல்லப் போனால், உயர் உணர்வுகளோடும், மனித உறவுகளோடும் கூட தொடர்பு காட்டி ஆய்வு மனதை அழியச் செய்தார்கள். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. கல்லானாலும் கணவன், குருவை மிஞ்சாதே என்று கூறி ஆய்வு செய்ய விடாது அமுக்கி வைத்தார்கள்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது (குறள்: 68)

என்னும் குறளை மறந்ததால் குறைபட்டார்கள். தமிழ் கூறும் நல்லுகச் செய்திகள் தமிழர் நெஞ்சில் பாய்ந்து செழிக்காமல் தரிசாய்ப் போனதற்கு காரணம். இந்தியச் சிந்தனைக்குள் தமிழர்கள் தங்களை இணைத்துக் கொண்டதுதான்.

வடமொழி தரும் வாழ்வியற் கோட்பாடுகள் மனிதர்களை பிறவியிலேயே தரம் பிரித்து தாழ்த்தி வீழித்தியது. ஆனால், தமிழ்ச் சிந்தனை உலகை ஒன்றாக்கி மகிழ்ந்தது. இந்த உண்மையை சிந்திக்கும் திறன் கொண்டோர் அனைவருக்கும் உணர வேண்டும்.

இந்த புதுமை உலகில் தமிழ் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் மொழியியல் ஆய்வாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், அரசியலார், போராசிரியர்கள் உலகம் முழுவதும் தமிழை ஆய்வு செய்யும் பேராளர்கள் மற்றும் பொருள் வளம் படைத்த தமிழர்கள் அனைவரும் இணைந்து ஒரு முகமாக அறிவியலை விளக்கும் ஆற்றல்மிகு மொழியாக தமிழ் விளங்க உழைக்க வேண்டும்.

புற்றீசலென புதுப்புதுக் கருவிகளும் வாழ்க்கையை வளப்படுத்தும் புதுமைப் பொருள்களும் பூத்துக் குலுங்கும் உலகில் தமிழை முதன்மைப்படுத்தும் ஆய்வுகளும் நிகழ்வுகளும் பொங்கிப் பெருக வேண்டும்.

தமிழின் தமிழர்களின் உரிமைகள் உலகோர்க்கு உள்ளது போல நிலைக்க வேண்டும். மொழி மற்றும் மாநில சமத்துவம் உள்ள கூட்டமைப்பாக இந்திய இறையாண்மைச் சட்டப்படி அமையவும், இனக்குருதி வழிச் சொந்தங்களை காக்க, ஸ்டாலின் போலந்து மீது படையெடுத்தது போல், இந்திய அரசு இயங்கவும் வழி காண வேண்டியது தமிழர் கடமையாகும். அப்போதுதான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களைக் காக்க இயலும். இதற்கு இந்திய அரசியல்வாதிகள் இணங்கவில்லை என்றால் வேறு வழிகளைத் தேடுவதும் தமிழர் கடமையாகும்.

தமிழ் இந்தியா மலரட்டும்!





மும்பையிலிருந்து வெளிவரும் தமிழ் இலெமுரியா வைப் பார்த்த போது எழிலார்ந்த எண்ணங்கள் அனைத்தும் இதயத்தில் வலம் வந்து கொண்டிருந்தன.
இலெமுரியா எது என்பது கருத்துகள் பல உண்டு என்றாலும், எதையும் அறிவார்ந்து, ஆராய்ந்து முடிவுகளைச் சொல்லும் அய்ரோப்பியா அறிவாளிகள் சொல்வதை நினைத்து நெஞ்சத்தைக் குளிர்விக்கலாம்.
சோவியத் நாடுகள் இணைந்திருந்த நாள்களில் வெளிவந்த மாக்கடல் மறைபொருள்கள் எனும் நூலில் இலெமுரியாயாவை ஓரளவு ஆய்ந்து கருத்துகளை வெளியிட்டார்கள்.
ஆஸ்திரேலியாவும், ஆப்பிரிக்காவும் இணைந்த நிலப்பகுதியாக இருந்தததை ஆராய்ந்து அதை கோண்டுவான எனும் பெயரால் அழைத்தார்கள்.
ஆனால், தமிழறிஞர்கள் கோண்டுவானாவை இலெமுரியா என்று அழைத்து அது கடலில் மூழ்கிய தமிழ் நிலம் என்றார்கள்.
டார்வின் தத்துவப்படி முதல் மனிதன் தோன்றியது இலெமுரியாவில் வாழ்ந்த இலெமூர் எனும் குரங்கிலிருந்துதான் என்றும் பலர் வாதிட்டார்கள்.
அழகிய கலை கொஞ்சும் அந்த நிலத்தில்தான் கபாடபுரம் எனும் பாண்டியனின் தலைநகரம் இருந்ததாக இராமாயணம் நம்மிடையை பதிவு செய்கிறது.
பொதிகை மலையின் மீதிருந்து கபாடபுரத்தின் எழிலை, அழகை எண்ணற்ற, எழுநிலை மாடங்களை ஏழேன் நாடுகளை எல்லாம் அனுமனுக்கு காட்டி, அதன் அருகில் உள்ள தொடர்ச்சி தான் இலங்கை என்று, இராமன் விளக்குவதாக இராமாயணம் சித்திரிக்கிறது.
இலெமுரியா என்ற இனிய பெயர் கொண்ட இதழ் ஒன்றை முப்பைத் தோழர்கள் நடத்துவது அறிந்தபோது எண்ணற்ற காட்சித் தொகுப்புகள் இதயத்தில் தோன்றி இனிமையூட்டுகிறது.
இலெமுரியாவில் மனிதர்கள் வானில் பறந்து செல்லும் அறிவியல் வகையறிந்திருந்தார்கள் என்று, அய்ரோப்பிய ஆவியுலக மாயாவாதிகள் கருத்தொன்றை முன் வைத்து வாதிட்டார்கள்.
கவிஞர் கண்ணதான் கடல்கொண்ட தென்நாடு என்னும் நூலில் இன்றுள்ள அய்ரோப்பியரின் இல்லற வாழ்வின் ஆண் - பெண் உறவுகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலெமுரியர்கள் கொண்டிருந்தார்கள் என்று கோடிட்டு காட்டியிருந்தார்.
எண்ணற்ற நூல்கலை யாத்த ஈடில்லா எழுத்தாளர் கா.அப்பாத்துரையாரின் இலெமுரியா என்னும் நூலில் இலெமுரியா கடலில் மூழ்கியதற்கான அறிவியல் நிலையை அருமையாக விளக்கியிருந்தார்.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கோள் அருகே வந்து காட்சி தரும் ஹோலிவால்மீன் போல அய்ம்பதாயிரம் ஆண்டுகளுக்கொரு முறை வரும் ஓர் அயனக்கோள், அதாவுவது தீக்கோள் (அக்னி) ஒன்று பூமி அருகே வந்தபோது இலெமுரியா கடல் கொண்டது என்று விளக்குகிறார்.
தமிழ் இலெமுரியா கண்ணில் பட்ட போது மும்பையில் (பழைய பம்பாய்) வாழ்ந்த பல மாதக் காட்சிகள் கண்களில் ஒளிந்து களிப்பூட்டியது.
பம்பாய் மாநகரத்தில் பரந்து வாழ்ந்து வரும் தமிழர்களோடு பழகிய பசுமைக் காட்சிகள் இன்றும் பரவசப்படுத்துகிறது.
தமிழ்நாட்டிலிருந்து எல்லா ஊர்களிலிருந்தும் வந்த தோழர்களையும் சந்தித்த நாள்கள் இன்றும் இனிமையூட்டுகிறது.
இங்கு வந்த பின்னர் முழுமையும் இலக்கிய உணர்வை இதயத்தில் பதித்த பிறகு இந்தியாவையும், அது ஓர் நாள் தமிழ் இந்தியாவாக இருந்ததையும் அறிய முடிந்தது.
வடவேங்கடம் தென்குமரி யாயிடை, தமிழ் கூறும் நல்லுலகம் எனும் தொல்காப்பியர் பாயிரம் கட்டும் வேங்கடம் என்னும் பெயர் வெப்பம் கொண்ட நிலம் என்றும், அது தார்பாலைவனத்தைக் குறிக்கும் வெப்பம் நிறைந்த இடம் என்றும், அதுதான் தமிழகத்தின் வட எல்லை என்றும், இன்றைய குமரி வரை அமைந்திருந்தது என்றும், அந்த நிலத்தை ஆட்சி செய்த தமிழும் அதன் கிளை மொழிகளும் இசைமொழிகளும் இன்றும் தித்திப்பைத் தருகிறது.
அந்த, அருமையான தமிழ் நிலம் கால ஓட்டத்தில் காட்சிகள் பலவாகிப் போனது.
ஆரிய தேசம், பரத கண்டம் என்றெல்லாம் அலங்கோணமானது. ஆதிக்கவாதிகள் வேட்டைக்காடாக ஆகிப் போனது.
மூக்கில்லாத நிலம் மூளியானது போல தமிழ் மொழி திரிந்த நிலையிலும் சிதைந்த நிலையிலும் பலப்பல மொழிகளாக பாழ்நிலை கண்டது.
உலகோர் போற்றும் உயர்நிலை மொழி தமிழ் இன்று ஓரங்கட்டப்பட்டது. தமிழ் பற்றிய தவறான தகவல்களைத் தருவோர் பெருகி வந்தனர்.
பாசம் நிறைந்த பயன் மிகுந்த தமிழை பல வழிகளிலும் ஒதுக்கவும், ஒழிக்கவும் முயன்று வந்தனர் - வருகின்றனர் பண்பாட்டுத் படையெடுப்பாளர்கள். அதுவும் தமிழர்களிடையே வளர்ந்து, தமிழர்கள் பொருள் வளத்தைத் தின்று கொழுத்தவர்களே தமிழை ஒழித்து - தமிழரை வீழ்த்தும் பாதகச் செயல்களைச் செய்கின்றனர். அதையும் தமிழர் பாரா முகமாக இருக்கக் காண்கிறோம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழன் - பிறவியில் மேல் கீழ் சொல்லும் பகவத் கீதையின் பிடியில் சிக்கி மாசுகொண்ட மனத்தவனாக - மானத்தை இழந்தவனாக இருக்கின்றான் என வருந்துகின்றார்கள் பல அறிவாளர்கள்.
இந்த நிலையில் தமிழ் இலெமுரியா வின் பணிகள் நிரம்ப இருப்பதாக நினைவு படுத்த விரும்புகிறேன்.
தமிழ் இந்தியா எனும் தலைசிறந்த நிலை காணும் நோக்கில் இயங்குவது இலெமுரியாவை மேலும் காணும் வாய்ப்பை உலகம் உணர உதவும்.
மும்பை நகர் முழுவதும் சிதறிக் கிடந்த தமிழர்கலை 1983இல் ஈழத் தமிழர்களுக்காக ஆற்றல்மிக்க வரதாபாய் ஒன்றாகத் திரட்டி இந்தியாவையே வியக்க வைத்தார்.
தமிழர்களுக்கு எதிரானோர் என்று காட்டப்பட்ட பால்தாக்கரே, தலைவர் கலைஞர் மும்பை வந்தபோது, தலைவரைச் சந்தித்தார். சந்தித்து விட்டு வெளியே வந்த தாக்கரே சொன்னார், மராட்டியம் நிலவியலிலும், பண்பாட்டு நிலையிலும் தென்னிந்தியாவைச்  சார்ந்தது என்றார்.
பஞ்ச திராவிடக் கதைகளில் மாரட்டியிலும், குசராத்தும் திராவிடம் என்றே குறிக்கப்படுகிறது.
அண்மையில் அகழ்ந்தெடுத்து குசராத் கடற்கரை நகர் ஒன்று தமிழ் நகராக இருந்தது. அது பூம்புகாரை ஒத்து இருந்ததாக தெரிகிறது.
ஆகவே, தமிழ் இலெமுரியா வின் பணிகள் மராட்டியரை, தமிழின் தொன்மக்களாக விளக்கும் வகையில் அமைய வேண்டுகிறேன்.
இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள ஆதிவாசிகள், மலைவாழ் மக்களெல்லாம் முன்னொரு நாளில் உயர்ந்த பண்பாட்டின் உறைவிடமாக விளங்கியவர்கள் என்று ஆய்வாளர்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.
பிகார், சார்க்கண்ட, உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகள், பஞ்சாப், சம்பல், வங்காளம் போன்ற பகுதிகளில் உள்ளோர் ஒரு காலத்தில் தமிழர்களாக ஒளி வீசியவர்கள் என உணர்த்த வேண்டுகிறேன்.
தமிழ் இலெமுரியா வை நடத்தும் நல்ல நண்பர்கள் தமிழ் இந்தியாவைக் காணும் வகையில் திட்டம் வகுத்து செயல்படுவது சிறப்பெனக் கருதுகிறேன்.
பாவாணர் மொழியில் சொல்வதென்றால் உலகமே தமிழ் நிலம் தான். உலக மொழி யனைத்தும் தமிழ் வழிதான் என்றாலும் உலகோர் விழிகளில், தமிழைக் காட்டுவதற்கு தமிழ் இந்தியாவைக் காட்டுவது முதல் முயற்சியாக வேண்டும்.

வாழ்க தமிழ் இலெமுரியா!