Wednesday 26 October 2016

மக்கள் தொகை

மக்கள் தொகை
நம் நாட்டில் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் மக்கள் தொகை மிகுவாக பெருகி வருகிறது. ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் உவமை சொல்ல இயலா வகையில் மனிதர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. மக்களின் தொகையை சொல்லி முடிப்பதற்குள் சொல்ல வந்த தொகை மாறிவிடும் அளவுக்கு வினாடி தோறும் புதமனிதன் குழந்தையாக உருவெடுத்து விடுகிறார். உலக எண்ணிக்கையில் அய்ந்தில் ஒரு பங்கு சீனாவிலும் இந்தியாவிலும் இருக்கிறது. பெற்ற குழந்தையை பேணி வளர்ப்பதற்கு பெருந்துணையாய் இருக்கின்ற பொருளாதார வளர்ச்சியோ மிகக் குறைவாகவே இருக்கிறது. பிறந்து விட்ட மாந்தர்க்கு உணவு, உடை, உறைவிட வசதிகலை வழங்குவதற்கு வளர்ந்து வரும் அறிவியல் வகை செய்தாலும் மனித உற்பத்தி வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது விஞ்ஞானம திணறுகிறது. அறிவியல் மேதைகளின் அயரா முயற்சியால் புதுப்புது வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொருள்களை குவித்தாலும், மனித இனம் அத்தனை பொருள்களையும் அரைத்த வண்ணம் இருக்கிறது. பல்கி பெருகி பலம் தரும் பலவித வித்துக்களை விஞ்ஞானிகள் கண்ட வண்ணம் இருக்கிறார்கள். மனித இனத்தை குறைக்கும் மார்க்கங்களை வகுத்த வண்ணம் இருக்கிறார்கள். தொகுத்த வைத்த முறைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்ன வண்ணம் இருக்கிறார்கள், இருந்தும் மக்கள் தொகை பெருத்த வண்ணம் இருக்கிறது.
ஆசிய-ஆப்பிரிக்க-லத்தீன் அமெரிக்க நாடுகளின் அளவுக்கு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஏன் கூடவில்லை? அங்கென்ன வளம் குறைவா? வயது வந்த பின்னும் குழந்தை பெறும் வகை தெரியாதவர்களா அங்கிருப்போர்? காதல் உணர்வே இல்லாத மரக்கட்டைகளா? அதுதான் இல்லை. உரிய வயது வரமுன்னரே வாழ்க்கையை துய்க்க முனைபவர்கள். காதல் உணர்வினிலே மிக கை தேர்ந்தவர்கள். கலைச்சுவை உணர்ந்தவர்கள். கவிக் கலைகள் அறிந்தவர்கள். தாய்மை உணர்வு இல்லாதவர்களா அதுவும் இல்லை. தாய்மை உணர்விலே தகைசான்றவர்கள்.
வயதிற்கு முன்னே கூட வாழத் தொடங்கிவிடுகின்றனர். அதற்காக வயிற்ரை பெரிதாக்கிக் காட்டுவதில்லை. காதல் வாழ்வில் களிப்படைகிறார்கள். அதற்காக கைக்குழந்தையை அடிக்கடி சுமப்பதில்லை. கவின் கலைகள் துய்ப்பவர்தான் அதற்காக கண்டபடி சிசுக்களை தோற்றுவிப்பதில்லை. தாய்மையுணர்வு வேண்டும் என்பதற்காக தாயாக வேண்டும் என்று தவிப்பதில்லை. குழந்தையை கொஞ்சி மகிழ வேண்டும் குதூகலம் கொள்ள வேண்டும், பிஞ்சு மழலையை நெஞ்சோடு அனைத்து நேசம் கொள்ள வேண்டும், பாசத்தை பொழிய வேண்டும், நெஞ்சம் மகிழ வேண்டும் என்றெல்லாம் இதயத்தில் இனிய உணர்வு கொண்டோர்தாம். அந்த பஞ்சு மேனியில் பலவித அணிகள் பூட்டி அகம் மிக மகிழ ஆசை கொண்டோர்தாம். அதற்கு அந்தக்குழந்தை தன் சொந்தக் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்ற சுயநல எண்ணம் இல்லாதவர்கள்.
பெற்றவளைத் தெரியாதவர்கள் வளர்த்தவளை, அவளோ அடுத்தவர்களோ சொல்லாதவரை அவளை பெற்ற தாயென்றே எண்ணுகின்ற உணர்வு மனித இயல்பில் கலந்திருப்பதை அறிந்தவர்கள். பொருலில்லார்க்கு இவ்வுலகம் இல்ø என்ற பொய்யா மொழியில் புகழ் சொல்லிற்குப் பொருள் தெரிந்தவர்கள். எந்த நாட்டுக் குழந்தையையும் தந்தெடுத்து பிறர் பெற்ர செல்வம் என்ற பேதமின்றி தான் பெற்றக் குழந்தையாய் பேணி வளர்க்கின்ற பெருமனதைப் பெற்றவர்கள். வான்பொழிவின் கணக்கிடும் வளம் குவிக்கும் வகையும் தெரிந்தவர்கல். படிப்பறிவின் பயனும் பட்டறிவின் திறனும் தெரிந்த பண்பாளர்கள், நாளும் நிகழ்கின்ற நாட்டின் நிகழ்ச்சிகளை அறியும் திறம் பெற்றவர்கள். அதற்கேற்ப தங்கள் அன்றாட செயல்களை அமைத்துக் கொள்ளக் கற்றவர்கள். அதனால் அங்கெல்லாம் அவ்வளவாக மக்கள் தொகை கூடுவதில்லை
மென்தோல் தழுவி மேனிசுகம் காண்பது தான் அங்கு இன்பம் என்று எண்ணுவதில்லை. அதற்காக அதை நினைத்து ஏங்கித் தவிப்பதில்லை. மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத் தமிழுக்கு குடில்லை என்றாரே பாவேந்தர். அதுபோல அஹ்கு பல்வேறு செயல்களினால் இன்பம் காண்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதில் சரித்திரம் காண்பதில் தனியாத சுகம் பெறுகின்றனர். அறிவியல் கூடங்களில் அமர்ந்து ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு அங்கும் இங்கும் தம் கவனத்தை அகற்றா வண்ணம் ஆயுள் முழுவதும் இருப்பவர்கள் அங்கே அனேகம் பேர் உண்டு.
நாட்டு மக்களின் ஒட்டு மொத்த நிலையை கணக்கீட்டு திட்டங்கள் தீட்டும் அரசுகள் அங்கே உண்டு. எல்லாரும் விவரம் தெரிந்தவர்களாக இருப்பதால் ஏமாற்றுச் செயல்கள் அதிகம் நடப்பதில்லை. மனதைக் கெடுக்கும் மாய்மாலச் செயல்களில் மக்கள் தம்மை பறி கொடுப்பதில்லை.
ஆனால் மக்கள் தொகை விரிவடையும் நாடுகளின் நிலையினை எண்ணிப் பார்த்தால் இதற்கு நேர்மாறான உணர்வுகளே நெஞ்சத்தை ஆளுகின்றன. எழில் வாழ்வைப் பெறுவதற்கு இடையூறாக உள்ள சங்கதிகளை இதயத்தில் இருந்து எடுத்தெறிய துணிவதில்லை. நெடுங்கால மரபுகள் என்று பல பயனற்ற கொள்கைகளை பாதுகாக்கும் பழக்கமும் இங்கே இருக்கிறது. பிள்ளைகள் பெறுவதே பிறவிப் பயன் எனும் எண்ணம் மனதில் இருந்து எடுக்க முடியாதவாறு இறுகிப் போய் விட்டது. சீரற்ற எண்ணங்கள், சிந்தனையற்ற செயல்கள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு பேருதவி செய்கிறது. இந்திய துணைக் கண்டத்தில் (மதவாதிகள் ஆதிக்கம் ஏற்பட்ட பின்) இங்குள்ள நிலை இன்னும் மோசம் அடைந்தது. ஆலயங்களில் காணப்படும் சிலைகளின் நிலைகல் நெஞ்சில் காம இச்சையை தோற்றுவிப்பதாக உள்ளது. நாளும் வழிபடும் ஆலயங்களில் பிள்ளை வரம் கேட்பது. பெற்றபின் அந்தக் கடவுளின் பெயரைச் சூட்டி, மொட்டையடித்து, காது குத்தி அந்தப் பிஞ்சுக் குழந்தையை கஷ்டப்படுத்திவிட்டு அடுத்த குழந்தைக்கு அடுத்த கடவுளிடம் மனுப் போடுவதும், ஆண் பிள்ளைகள் பிறந்தால் பெண் வேண்டுமே என்ரு அடுத்தடுத்துப் பெறுவது. பெண் பிள்ளைகள் என்றால் ஆணுக்கு முயற்சித்து அய்ந்தாறு பெண்களை பெற்று விட்டு அவதிகளை சுமப்பது - உண்ண உணவின்றி - உடுத்த நல் உடையின்றி துன்புறுவது, வானமே கூரையாக வெயிலிலும், மழையிலும் காய்ந்து நனைந்து நோய்களை தோற்றுவித்து நொந்த வாழ்வில் மனதை நுழைப்பது என்பதெல்லாம் இங்கு நீக்க முடியாத நித்தியவாழ்வாகி விட்டது. அரசின் திட்டங்களெல்லாம் மக்களின் பெருக்கத்தால் நீர்த்துப் போய் விடுகிறது. நல்ல சூழல்கள் நசிந்து போய் விடுகிறது. வாய்ப்புகல் பங்கிடப்பட்டு உரியவர்களுக்குரியது. கிடைக்காத காரணத்தால் சீரான வழிகள் சிதிலமடைந்து, சீர்கேடான சூழல்கள் தோன்றி நல்லவர்களுக்கு துன்பம் தரும் தறுதலைகளை தோற்றுவித்து விடுகின்றன.
காலிகள், கயவர்கள், தீயவர்கள், திருடர்கள், நலம் கெடுக்கும் நஞ்சுகள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கபட நெஞ்சிநர் என்று மக்களின் பெருக்கம் தரும் நெருக்கடிகள் மனிதர்கள் மாற்றி விடுகின்றன. இதையெல்லாம் இங்குள்ளோர் எண்ணி வருந்துவதில்லை. இருப்பதை அனுபவிக்க குழந்தை வேண்டாமா? எங்கள் குலம் தழைக்க வாரிசு வேண்டாமா? என்று எண்ணங்களே இதயத்தை ஆளுமை செய்கின்றன.
நாட்டு வளம் என்ன, நமது பலம் என்ன, மாறிவரும் சூழலென்ன, வளர்ந்து வரும் உலகம் என்ன என்று எண்ணிப் பார்க்க மறந்து விடுகின்றனர். போட்டி, பொறாமை, பொச்சரிப்பு, பொல்லாங்கு, அறியாமை, அடுத்துக் கெடுத்தல் ஆகிய உணர்வுகளை வளர்த்து விடுகின்றனர். அதனால் உண்மை மறைந்து மன ஊக்கம் இழந்த உதவாக் கரைகள் பெருகிவிடுகின்றன. இந்த இழிநிலை மறைந்திட்ட இதயம் களித்திட எண்ணங்கள் இனிதாகி உள்ளம் உவந்திட, உலகோடு நாமும் உயர்ந்திட பெறுவதை பெருகுவதை குறைப்பீர்!

No comments:

Post a Comment