Thursday 21 April 2016

செல்வி ஜெ. ஜெயலலிதாவின் சிறுமைக் குணங்கள்

செல்வி ஜெ. ஜெயலலிதாவின் சிறுமைக் குணங்கள்
அண்ணா தி.மு.க என்பதை ஆரியக் கட்சி ஆக்கினார்.
அவலங்களின் விளைநிலமாகத் திகழ்ந்தார்.
அங்கெங்கினாதபடி எங்கும் ஊழலை வளர்த்தார்
அலட்சியப் பேருருவாக உருக்கொண்டார்
ஊழலில் முதலிடத்திற்கு தமிழ்நாட்டைக் கொண்டுவந்தார்.
இருபது மணிநேர மின்வெட்டை ஏற்படுத்தினார்.
தொழிற்கூடங்களைத் தொலைத்துக் கட்டினார்.
அய்ந்தாண்டு ஆட்சியில்  அய்ம்பதாண்டு வளர்ச்சியைக் கெடுத்தார்
அம்மா என்ற புனிதத்தை அசிங்கப்படுத்தினார்
அடிமைகளின் கூடாரமாய் அதிமுகவை ஆக்கினார்
பொருளாதார செழுமைகளை புதைத்து மகிழ்ந்தார்
உழைக்காத உல்லாசியாய்  ஊராய் ஆண்டார்.
மக்களாட்சி புனிதத்தை மாசுபடித்தினார்.
வேலை இல்லாதார் எண்ணிக்கையைக் கூட்டினார்.
மதுக்கடையால் மகளிர் தாலியைப் பறித்தார்.
குன்றேறி உயர்ந்த தமிழகத்தை குழிக்குள் புதைத்தார்
ஊழலுக்காக இருமுறை சிறை  ஏகினார்
முதலிடத்தில் இருந்து தமிழகத்தை
கடைசியில் வைத்தார்.
பிரம்மன் முகத்தில் பிறந்தவர்களின் கைப்பாவையானார்
பாப்பாத்திதான் நானென்று பறையறைந்தார்
பிரபாகரனைத் தூக்கிலிடுங்கள் என்றார்
பணத்தால் எதையும் செய்யமுடியும் என்றார்
பண்பாட்டுச் செழுமை இல்லாதவர்
ஆணவம், அலட்சியம், அகங்காரம் உள்ளவர்
இலட்சம் அரசு ஊழியர்களை தெருவில் நிறுத்தினார்
நாவலரை கழிந்த ரோமம் என்றவர்
எம்.ஜி.ஆரை இதயத்தில் இழிவாக வைத்திருந்தார்
யாரையும் மதிக்காத மனப்போக்கு உள்ளவர்
தன்னுடைய குலத்தாரைக் கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தினார்
சோபன் பாபுடன் இணைந்திருந்தேன் என்றார்
எம்.ஜி.ஆரோடு உடன்கட்டை ஏறுவேன் என்றார்
பொய் சொல்ல விதி நூற்றுப்பத்தை பயன்படுத்தினார்
தி.மு.கவின் சாதனைகளை தன்னுடையது என்றார்.
ஊர்கெடுத்தவரையெல்லாம் கட்சியின் உறுப்பினராக்கினார்
உதவாக்கரைகளை ஊராள வைத்தார்.
பினாமிகள் மூலம் ஊரார் நிலங்களை வளைத்தார்.
உருவாகி இருந்த வளங்களை உருக்குலைத்தார்.
உண்மை பேசுவதில்லை என்று உறுதியேற்றார்
ஊடகங்களை மிரட்டி ஊமையாக்கினார்.
அண்ணாவின் பெயரை மறைக்க முயன்றார்
தமிழை படிக்க விடாமல் தடுத்து நின்றார்
கமிஷன், கரெக்ஷன், கலெக்ஷனை வளர்த்தார்.
மக்களுக்காக போராடி சிறை செல்லாதவர்.
நிலத்தில் கால்பதிக்காத மேட்டுக்குடியைச் சார்ந்தவர்
          பெரியோர்களே! தாய்மார்களே! நடுநிலையாளர்களே! மாணவ, மாணவிகளே? தூய மனம் படைத்தவர்களே இலட்சிய வடிவான இளைஞர் உலகமே, எண்ணிப் பாருங்கள். நடந்த ஆட்சியின் நலிவுகளை நெஞ்சில் கொண்டு நல்ல சூழல்களை உருவாக்குங்கள். கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிகொண்டது போல் எம்.ஜி.ஆர். உருவாக்கி அகிமுக வில் அண்ணாவின் பெயர்கொண்ட கட்சியை ஆரிமாலா கைப்பற்றியதை நினைவில் நிறுத்தி வாக்களிக்கும் நேரத்தில் ஒளிதரும் உதயசூரியனில் முத்திரை இட்டு தமிழக நிலை உயர்த்தும் நிலைகாண வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment