Tuesday 20 September 2016

பரத்தையரின் இதழ்ச் சுவையில் பரவசமடைந்த பாவலர்கள்

பரத்தையரின் இதழ்ச் சுவையில் பரவசமடைந்த பாவலர்கள்
நிறைய நூல்களைப் படித்து நெஞ்சில் பதிய வைத்து நினைக்கின்ற போதெல்லாம் இதயத்தை இனிக்க வைக்கும் இயல்புகள் என் விழிமுன் இரண்டு நூல்கள் தன் முகம் காட்டி முறுவல் செய்தது.
மணிமேகலையை ஆய்வு செய்த அறிஞர்களின் கட்டுறைகளைத் தாங்கிய மணிமேகலை ஒரு மக்கள் இலக்கியமென்ற நூலொன்று வரலாற்றில் தேவதாசிகள் என்று நிறைய நிறைய செய்திகளைச் சொல்லும் நூல் மற்றொன்று.
தமிழை தமிழகத்தைப் பற்றிய எத்தனையோ நூல்களை படித்து மகிழ்ந்த எனக்கு இந்த இரண்டாவது நூல் தரும் செய்திகள் அகம் முழுவதையும் அவலத்தில் ஆழ்த்தி அழுத்தி அழ வைத்தது.
ஆண்டாண்டு காலமாக நின்று நிலைபெற்ற பரதத்தை உலகத்தை ஒட்டு மொத்தமாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்கிறார் இதன் ஆசிரியர்.
எல்லா நாட்டு இலக்கியங்கள் வரலாற்றில் பதிந்து நீக்கமற நிறைந்திருப்பதை நிரல் படுத்திக் காட்டுகிறார் இந்த ஆய்வாளர்.
அதில் குறிப்பாக தமிழகத்தின் பரத்தையர்களை காட்சிப் பொருளாக்கி இந்தப் பரத்தையர் உலகம் உருவான காரணிகளையும் அதன் தோற்றங்களையும் தொட்டுக் காட்டுகிறார்.
வேதமோகிகள் இங்கு கற்பனையாய் கற்பித்த இந்திரலோகத்தில் நிகழ்ந்த ஒரு விளைவாகத்தான் இந்த தேவதாசிகள் எனும் நிலை தோன்றியது. அது பின் பரத்தை உலகமாக உருவெடுத்து என்று ஆதராங்களை அள்ளித் தெளிக்கிறார்.
பின் கற்பனை வடிவான சைவ மதத்தின் நாயகன் சிவபெருமானின் ரிஷிபத்தினிகளின் காமசேட்டையால் பல்கிப் பெருகி ஒரு குலமாகி பின் பிறவிச் சாதியானது என்கிறார்.
அதில் சில மாமேதைகளையும் பரத்தையர் இல்லத்தின் மாசு நீக்க அந்தக் குலமங்கையரின் தொண்டறத் தூய்மையை நிலை நாட்டுகிறது.
சங்க காலத்திற்கு பின் வந்த மன்னர்களும் புலவர்களும் பரத்தையர்களின் பாதத்தில் தலை வைத்து அவர்கள் அங்கம் முழுவதையும் அணு அணுவாய் சுவைத்து அதன் சுகானுபவன்களை மக்களும் துய்த்து இன்புற கோவில்களையும் அதன் தல புராணங்களையும் உருவாக்கி மானத்தோடு வாழ்ந்தவனை மடமைப் படுகுழியில் தள்ளி மகிழ்ந்தார்கள்.
இந்த நூல்தரும் செய்திகளை விரித்து விவரிப்பதென்றால் நீட்டோலைகள் நெடிதுயர்ந்து குவிந்து விடும்.
ஆகையால் சில செய்திகளை சொல்வது நினைவில் நிற்க உதவும் என்று கருதுகிறேன்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளாகவே இந்தத் துணைக் கண்டம் முழுவதும் நிறைந்திருந்த சைவ மதத்தைப் பின்னுக்குத் தள்ள வைணவ பார்ப்பனர்கள் பல்வேறு முயற்சிகளை தொடங்கி தொடர்ந்தார்கள்.
புத்த சமண சமயத்தை புதைகுழியில் போட்டு புதைத்த வைணவப் பெரும்புலவர்கள் சைவத்தையும் ஓரங்கட்ட ஓயாது சதி செய்தனர்.
திருக்கோட்டியூர் கோபுரத்தில் இருந்து குதித்து உயிர் விட்ட இராமானுஜர் இதற்கான தொடக்கப் புள்ளியாய் திகழக் காணலாம்.
இங்குள்ள சைவச் சின்னங்கள் பலவற்றை மாற்றியவர் அவர்தான் என்கிறது பல்வேறு ஆய்வுச் செய்திகள்.
பல்வேறு மன்னர்கள், சிற்றரசர்கள் நில உடமையாளர்களை தம் வசப்படுத்தி ஊர்தோறும் இராமாயணச் சாவடிகளை உருவாக்கி அதில் இராமாயணப் பாரதம் பாகவதத்தை பரப்பி நின்றார்கள்.
ஏற்கனவே பகவான் கிருஷ்ணன் போதித்த நால்வகை சாதியை நாலாயிரச் சாதியாகப் பல்கிப் பெருக்கச் செய்தவர்கள் (இந்தியாவில் எட்டாயிரம் சாதிகள் இருப்பதாக டாக்டர் மா.இராசமாணிக்கனார் கூறுகிறார்) இந்தப் வைணப் பிரச்சாரர்கள்தான் என்பதை ஆய்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் இந்த வைணவ பரப்புரைகள் இன்றுவரை ஏராளமாக இடம் பிடித்திருக்கக் காணலாம்.
அறிவியல் பூத்த இந்தக் காலத்தில்கூட பிழைப்புணர்வு கொண்டவர்கள் பித்தம் மனம் படைத்தவர்கள் பேரளவுக்கு ஈடுபாடு காட்டி பரப்புரை செய்வதை நாளும் பார்க்கிறோம்.
இதில் சுட்டப்பட வேண்டியது என்னவென்றால் இந்த வைணவப் படைப்புகளான இராமாயணம், பாரதம் ஆகியவற்றை ஆகாயமளவு புகழ்ந்து போற்றுவதும் அதைப் படைத்தவர்களை பல்வேறு நிலைகளில் பாராட்டி மகழ்வதையும் நாளும் இங்கே காண முடிகிறது.
வால்மீகியின் ஆக்கத்திறன், வியாசரின் வித்யார்த்தி வித்தகம் இவர்களின் பாத்திரப் படைப்பு, கம்பனின் கவித்திறன், காவிய உத்தி என்ற நூல்களை மட்டுமல்லாது அதை படைத்தவர்களின் பெயர்களில்கூட அன்பு வைத்து ஆனந்தம் கொள்கிறார்கள்.
அரசியலின் ராஜ தந்திரங்கள், போர்முறைகள் பகவானின் பகவத்கீதையில் உள்ளடங்கிய உண்மைகள் என்றெல்லாம் ஓங்கி ஒலித்திடக் காண்கிறோம்.
ஒருவனுக்கு ஒருத்தி என்றும் அடுத்தவன் மனைவி மீது ஆசை வைத்தால் அவனை அழிப்பது தர்மம் என்றும் தந்தை சொல் மிக்கது ஏதுமில்லை என்றும் பூமியில் தோன்றும் புண்ணான நிலை மாற்ற வானலோகத்தின் கடவுள்கள் வருவார்கள் என்றும் ஒவ்வொரு நாளும் ஓயாது ஓலமிடக் காண்கிறோம்.
ஆனால் மேற்காணும் இலக்கியங்களை படைத்தவர்களின் உள்ளமும் நடப்பும் எப்படி இருக்கிறது என்பதை இலக்கிய ஆய்வாளர்கள் பெரிதும் வெளிப்படுத்துவதில்லை என்பது வேதனையான ஒன்றுதான்.
இதில் கொடுமையும் என்னவென்றால்,
பெண்ணின் பெருத்தக்கயான கற்பெனும்
திண்மை உண்டாக்கப் பெரின்.
எனும் குறள் வழங்கும் மண்ணில் பிரண்மனை நோக்கா பேராண்மை எனும் வாழ்வறிஞர் வள்ளுவன் தோன்றிய நாட்டில்
மங்கல என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.
என்றெல்லாம் இயம்பிய இனியமொழி தமிழைக் கையாண்ட கம்பரும் காளமேகமும் பட்டினத் தடிகளும் அந்த பட்டினத்தடிகளின் விந்தை உணவாக வாய்வழியாக உண்டதால் பிறந்த அருணகிரிநாதரும் பரத்தையர்களின் பாதம் தாங்கி பல்லிளித்து கிடந்தார்கள் என்று வரலாற்றில் தேவதாசி என்ற நூல் வருந்திச் சொல்லி வாய்விட்டு கதறியழுகிறது.
பல்லாண்டு காலமாக தமிழின் செழுமையை - தூய்மையை சிதைத்து, சீரழித்து நடந்த படையெடுப்புகளுக்கும் பெரிதும் துணை செய்த பாதகர்கள் தமிழ்த்தாய் வயிற்றிலுதித்த பல பாவலர்கள் தான் என பற்பல ஆய்வாளர்களின் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 1000 ஆண்டுகளாகவே தமிழ் இன - மொழி, பண்பாடுகளை சீரழித்து அழித்து வரும் ஆரிய வழிக் கருத்துக்களை வழங்கியவர்களை கூட மன்னித்து விடலாம். ஆனால் அந்தக் கருத்துக்களை மொழிப்பெயர்ப்பு முலாம் பூசி மினுக்குக் காட்டி இங்குள்ள அதிகார வர்க்க மன்னர்களை ஆலயங்கள் கட்ட வைத்த அறிவு ஜீவிகளை மன்னித்ததுதான் மக்கள் செய்த மாபெரும் தவறாகும்.
அறநெறியை போதித்த காவியங்களைத் தந்தவர்களின் உள்ளம் கள்ளத்தனமில்லா கண்ணியம் மிக்கதாக இருக்க வேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் பிழையுள்ளவர்களாக இருந்தால் பிள்ளைகளும் மாணவர்களும் நல்லவர்களாக வளர்வார்களா?
நாங்கள் ஒரு காலத்தில் நாட்டைக் கெடுத்த நால்வர் என்றொரு நிகழ்வை நடத்தியிருக்கிறோம். அதில் அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் - மணிவாசகர்களின் படைப்புகளை விரித்து விமர்சிப்பதுண்டு.
பின்னர் கம்பர் அருணிகிரிநாதர், பட்டிணத்தார், வில்லி ஆயோரையையும் விமர்சித்த பேசுவதுண்டு.
இந்தக் காவியப் படைப்பாளர்களில் பலர் விலை மகளிரின் தழுவல்காக தவம் கிடந்தார்கள். பொன்னி என்ற வேசிக்கு அடிமை முறி எழுதிக் கொடுத்து அங்கேதான் வாழ்நாளைக் கழித்தான் கம்பர் என்கிறார் இந்த ஆய்வாளர்.
இதழ் சுவைத்து எச்சில் குடிப்பதில் யார் யாருக்கும் சளைத்தவர்களல்ல என்று கம்பர் காளமேகப்புலவர் பட்டிணத்தார் அருணகிரிநாதர் ஆகியோர்களை சந்தியில் நிறுத்துகிறார்.
இதுபோக மன்னன் குலோத்துங்கனும் ஒட்டக்கூத்தரும் கம்பர் சுவைத்த பெண்ணோடு ஏற்கனவே இணைந்திருக்கிறார்கள் என்று குறிப்பையும் தருகிறார்.
வேசியான தாசிகள் எழுவகையாகப் பிரித்துக் காட்டுகிறார்.
ஒருவன் தாம் கற்ற கல்வி
எழுமையும் ஏமாப்புடைத்து
என்ற குறள் ஒலித்த நாட்டில் வேசிகளை ஏழுவகை என்றனர்.
தத்தை, விக்ரிதை, ப்ருகிரீதை, பக்தை, ஹரிதா, அலங்காரை, உத்ரகணிகை - என்ற ஏழுவகை என்கிறார் இந்த ஆய்வாளர்.
காமசூத்ரா எழுதிய வாத்சாயனர் அரசியல் சட்டப்பிரிவு போல பரத்தையரை மூன்று பிரிவுகளாக காட்டுகிறார். தேவதாசி, இராஜதாசி, சமூக தாசி என்று துறையை ஏற்படுத்துகிறார்
அதில் சமூகதாசிகளை ஒன்பது உட்பிரிவுகளாகப் கிளைப்படுத்துகிறார். கும்பதாசி, அழகுதாசி, கணிகை, சேடி, விபசாரி, பிரகாசபினெஸ்டை, குலசில்பகாரிகை, நடிகை என்பதோடு இவர்களின் வேலைத் திட்டத்தையும் அதன் வரையரை எல்லைகளையும் வகைப்படுத்திக் காட்டுகிறார் வாத்சாயனார்.
ஏற்கனவே எட்டு வயதிலே இறைவனோடு இணைந்த பெண் (அதாவது கற்சிலைக்கு மணமுடித்து வைத்து) உந்திய இயற்கை உணர்ச்சியை அடக்க இயலாமல் ஊர்மேயும் நிலை கண்டதால் அவர்களை சமூகம் வேசி-தாசி, விபச்சாரி, கூத்தி, வைப்பாட்டி, தேவடியாள், விலைமகள், கொண்டி மகள், பொருட் பெண்டு, பொட்டி மகள், கணிகை, பரத்தை வரைவுமகளிர், கள்ளப் பொண்டாட்டி என்று பல்வேறு இழிமொழிகளால் இழித்து கீழ்மைப் படுத்துகிறது.
கேரள மன்னர் குலசேகர வர்மன் தன் அன்பு மகளை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தேவதாசியாக்கினான் வில்லிபுத்தூர் பெரியாழ்வார் தன் மகள் ஆண்டாளை அதே கோவிலில்தான் சாய்ந்துறங்கும் சயனக் கடவுளுக்கு கட்டி வைத்தார் என்றெல்லாம் செய்திகள் நமது செவிப்பறையைக் கிழிக்கிறது.
வால்மீகியின் ஹோமரின் காவியங்களை ஆய்வு செய்தவர்கள் அந்தக் காவியத் தலைவி பரத்தை மனம் கொண்டவர்கள் என்றே உறுதிப் படுத்துகிறார்கள்.

பல மனைவிகள் கொண்டவர்களை பலரும் அறிவார்கள். ஆனால் பல ஆண்களை மணந்த பெண்ணாக பாஞ்சாலியைத் தான் வேதமோதிய வியாசர் முதன் முதலாக நமக்குக் காட்டுகிறார். அதிலும் ஒரு வேசியின் மனோபாவமாக கர்ணனின் மீதும் காதல் கொண்டாள் பாஞ்சாலி என்று பாருக்கு பறை சாட்டுகிறார்.

No comments:

Post a Comment