Wednesday 23 May 2018

சி.சுப்ரமணியத்தின் நூல்கள்.

இந்தியாவின் மற்றும் தமிழகத்தின் நிதியமைச்சர் திரு சி.சுப்ரமணியம்  நான்சென்ற சில நாடுகள்
உலகம் சுற்றினேன் என்றபயண நூல்களும்  தமிழால் முடியும் என்ற தமிழ்மொழியின் ஆற்றல் திறன்பற்றிய சிறந்த நூல் ஒன்றையும் எழுதி வாசிப்போரின் உள்ளம்மகிழும் வகையில்  நம்மிடையே வாழ்ந்தார்.

முதலில் எழுதிய. நான் சென்ற சிலநாடுகள் என்ற நூலில் கிழக்காசியா நாடுகளிலும் அய்ரோப்பாவில் சில நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்த அவர் அந்தநாடுகளின் வளர்ச்சி முன்னேற்றம் ஆகியவற்றின்திட்டங்களைஇந்தியாவுக்கு கொண்டுவருவோம்  என்று உறுதியளித்தார்.

தமிழால் முடியும் என்ற நூலில் தமிழினௌ ஆற்றலை திறமையை வியந்து போற்றி தமிழை அரசின் ஆட்சிமொழியாக உயர்த்தி அரசு அலுவலகங்ளில் பயன்படசெய்வோம். அன்று தமிழுக்கு எதிராக திகழ்ந்த காங்கிரசின் அமைச்சர் ஒருவர் தமிழை பெருமைப்படுத்தியதை வியந்து மகிழ்ந்தது ஏடுகள்.

No comments:

Post a Comment