Wednesday 13 July 2016

நீயா? நானா?

அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், நலம்சூழ நல்வாழ்த்துக்கள். விதவிதமான வித்தயாசத் தலைப்புகளில் விவாத அரங்குகளில் விளக்கம் தந்து விழிப்புணர்வை உருவாக்கும்  நீயா? நானா? அதிகம் படித்து பட்டங்கள் பெற்றவர்களையும் அது அவசியமில்லை என்று நினைப்பவர்களையும் எதிர் எதிர் இருந்து கருத்துக்களை வெளிப்படுத்த வைத்திருக்கிறது.
ஊர் சுற்றிகள் என்று போட்டு விட்டு அவர்களுக்கு ஆதரவாகத் தானே பலவற்றையும் சொன்னீர்கள். படிப்பைக் குப்பை என்ற அந்த இளைஞரை பாராட்ட முடியாது பொது விவாதங்களில் பண்பட்ட சொற்களை பயன்படுத்துவது தான் அறிவுடமையாகும்.
140 பட்டங்கள் பெற்ற அபூர்வ பார்திபன் கோபியின் கேள்விகளைப் புரிந்து பதில் சொல்லத் திணறிப் போனார். மெத்தப் படித்தவன் பித்தன் என்பது தமிழ்ப் பழமொழி. 140 பட்டங்களைப் பெறுவதற்கு மாதம் ஒன்று என்றால் 12 லி ஆண்டுகள் ஆகும். மூன்று மாதத்திற்கு ஒன்று என்றால் முப்பத்து ஏழு ஆண்டுகள் ஆகும். இதில் எதுவும் சாத்தியமில்லை.
இந்தியாவில் பட்டங்கள் பெறுவதற்கு பணம் முக்கிய இடம் வகிக்கிறது. என்னுடைய நண்பர்கள் சிலர் ஒடிசா பல்கலைக்கழகங்களிலும் கர்நாடகத்திலும் பல எம்.ஏ. பட்டங்களை பணம் கொடுத்து பல ஆண்டுகளுக்கு முன்னரே பெற்று பணிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
பட்டங்கள் பெற்றிருந்தாலும் பட்டறிவுதான் பயனுடையதாக இருக்கும். ஒரு மருத்துவரோ, வழக்கறிஞரோ படிப்பை முடித்தவுடன் அனுபவப்பட்ட ஒருவரிடம் முதலில் பயிற்சி எடுப்பது தான் வழக்கமானதாகும்.
சோவியத் யூனியன் இருந்த காலத்தில் ஓய்வுப் பெற்றவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி மாணவர்களுக்கு தங்கள் அனுபவங்களை எடுத்துக் காட்டி பயிற்சியளிப்பார்கள்.
படிப்பது தவறல்ல, பட்டங்கள் பெறுவதென்பது அதுவும் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்களை பெற்றதை எத்தனையோ கிறுக்குத்தனங்களுக்கு எல்லாம் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்கின்ற போது இந்த பட்டங்களைக் குவித்தவரையும் பதிவு செய்யலாம்.
டிராவல்ஸ் செய்யும் ஒருவர் தாய்லாந்தில் கண்ட மறைக்கப்பட்ட தமிழ் செல்வங்களைச் சேகரித்து நூலாக வழங்கியதைக் குறிப்பிட்டார். அவரை அது பற்றியச் செய்திகளை இன்னும் சொல்ல வைத்திருக்கலாம். நல்ல நிகழ்வை நல்கிய நீயா? நானா?வை பாராட்டுகிறேன்.

No comments:

Post a Comment