Friday 8 January 2016

உண்மை பேச வேண்டும்

உண்மை பேச வேண்டும்
இங்குள்ள தொலைக்காட்சியில் பற்பலச் செய்திகளை மக்களிடம் பதிவு செய்யும் வகையில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அதில் ஒன்று இந்த விவாதப் பகுதியாகும். ஒவ்வொரு செய்தியின் பின்னணியில் ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு பல்வேறு பட்டவர்களை அழைத்து கருத்துகளைக் கேட்கிறீர்கள்.
ஊடகம் எனும் சொல் வெறும் ஊடல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமில்லை உண்மைகளை ஒழித்து வைக்கும் மறைவிடமும் அல்ல. அது செய்திகள் கருத்துகளின் உண்மை நிலைகளை உற்று நோக்கி மக்களின் உள்ளங்களை ஊடுவிச் சென்று உறைய வைக்கும் உன்னத இடமாகும்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுப்போர் தங்கள் கட்சி மேடைகளாகக் கருதி தங்கள் பவுசு பம்மாத்துக்களை நியாயங்களுக்கு மாறாக பறைசாறறுக்கிறார்கள். இதை நெறிப்படுத்தி நேர்படுத்த வேண்டிய நெறியாளர்களும் புராணத்தில் வருகின்ற நாரதனைப் போல் அவரவர்களுக்குத் தக்கவாறு பேசுகிறார்கள்.
அரசியல் கட்சிகளில் அழைக்கப்படுபவர்களும் சரி, அறிவு ஜீவிகள் என்று கருதி அங்கு அமர்த்தப்படுபவர்களும் சரி, அறத்தன்மைக்கு மாறாக தங்கள் அழுக்கு மனதில் உருவான ஆக்கமில்லாத நிலைகளை முன் வைக்கிறார்கள்.
உலகம் உருவான காலத்திலிருந்து சிந்தனையில் பல்வேறு நிலைகள் நின்று வருவதைக் காணலாம். எந்த ஒரு மனிதனுக்கும் எண்ணத்தில் ஒரு சார்பு இருக்கும் என்பதுதான் உண்மை. ஆனால் இந்த சார்புநிலைகள் சமச்சீர் முறைகளுக்கு மாறாக இருக்கக் கூடியதாக கருதி நடுநிலை தரவுகளை ஏற்படுத்தினார்கள்.
ஒருசார்புடையவர் அறிந்திருந்த கருத்துகளை எங்கே சொல்ல வேண்டும், எங்கே சொல்லக்கூடாது என்று அறம் வகுத்தார்கள். அதைத்தான் சனநாயகம் என்றார்கள். அந்த சனநாயக மாறுதல்களை தாங்கி நிற்கும் மனத்தூய்மைகளான மக்கள் மன்றம், நீதிமன்றம் ஆட்சி மன்றம், ஊடகம் என்று உரை சொன்னார்கள், முறை வகுத்தார்கள். இந்தத் துறையில் பொறுப்பேற்பவர்கள் தங்கள் மன வேறுபாடுகளை வெளிப்படுத்தக் கூடாது என்றார்கள். இவர்களின் உள்ளமும் நடப்பும் உண்மை சார்ந்ததாக நடைமுறையில் உண்மைகளைச் சொல்லும் தூய உணர்வும் இருக்க வேண்டும் என்று ஓங்கி அறைந்தார்கள்.
உலகம் முழுவதுமே உருவான எல்லா அமைப்புகளும் ஒரு சார்புநிலை கொண்டதுதான். அது மக்களின் எந்த அளவுக்கு மாற்றத்தினை உருவாக்கி வளர்த்து வளம் பெறச் செய்யும் அந்த நிலையில்தான் தங்கள் நெஞ்சத்தைக் காட்ட வேண்டும்.
சொல்ல வேண்டிய கருத்துக்கள் கொள்கைக்காக அமைப்புகள் ஒரு பெயரைச் சூட்டி வைத்துக் கொள்கிறார்கள். அரசியலில் மதமோ வேறு துறைகளைச் சார்ந்தவர்களோ தங்கள் அமைப்பிற்கு தங்களுக்குப் பிடித்தமானவர்களை வைத்துக் கொள்கிறார்கள். அந்த அமைப்பைத் தொடங்குகின்றபோது ஒரு கொள்கை அறிக்கையை வெளியிடுவார்கள்.
அப்படித்தான் திராவிட இயக்கம் என்றெழைக்கப்படும் தென்னிந்திய நல உணர்வுச் சங்கமோ, திராவிட கழகமோ தி.மு.க.வோ தங்கள் கொள்கைக் கோட்பாடு என்றுவென்று மகத்தான பதிவுகளை வெளியிட்டு சட்டப் புத்தகங்களில் கூட பதிவு செய்து வைத்தார்கள்.
இதுபோல பல அமைப்புகளும் வைத்திருக்கலாம். ஆனால் அந்த அமைப்புகளில் இருக்கின்ற முன்னோடி மனிதர்களுக்கு அந்த அமைப்பின் நிலைகளை மிகத் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் அவர்களை ஊடக நிகழ்வுகளுக்கு அழைக்கின்ற விவாத நெறியாளர்களுக்கு மிகத் துல்லியமாகத் தெரிந்து வினாத்தொடுத்து விளக்கம் தரும் நிலையில் அவர் மனம் ஆற்றல் உள்ளதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் கூட்டத்தில் உள்ள மயக்கங்களைத் தீர்த்து மகத்தான இடத்திற்கு அழைத்துச் செல்லும் இராசபாட்டையை போட முடியும்.
அப்படியொரு நிலையில் இங்கு எந்த அமைப்பும் இல்லையென்பது விழிகளில் நீர்வடிய வைக்கும் வேதனையாகவே இருக்கிறது. எந்தவொரு அமைப்பிற்கும் அதில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும் தெளிவான மனம் இல்லை. அதில் திரிந்த நிலையில் தான் இருக்கிறது.
எல்லாத்துறைகளையும் ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கும் துறைதான் அரசியல். அது ஒன்றுதான் உலகம் முழுவதும் உயரிடத்தில் இருந்து கொண்டு ஆளுமை செய்கிறது. அந்த அரசியலை ஒரு அறிவியல் சார்ந்தது. விஞ்சிய நிலை கொண்ட விஞ்ஞானம் என்றனர் வியத்தகு அறிவாளர்கள். அந்த விஞ்ஞானம்தான் இன்றைய நிலையில் மட்டுமல்ல என்றென்றும் மக்களை வாழ்விக்கும் வற்றாத பேராற்றலும் இயற்கையின் இயக்கமும் அதில் ஏற்படும் இடர்பாடுகளும் கூட அறிவியல் வெளிப்பட்ட வீதியின் செயல்பாட்டு விதிகளால் என்பது விந்தைதரும் விஞ்ஞான விளக்கமாகும். அந்த விஞ்ஞானம் தான் இன்றைய நிலையில் மட்டுமல்ல என்றென்றும் மக்களை வாழ்வித்த வாழ்விக்கும் வற்றாத பேராற்றலாகும். இயற்கையின் இயக்கம், அதில் ஏற்படும் இடர்பாடுகளும் கூட அறிவியல் வழிப்பட்ட வேதியின் செயல்பாட்டு விதிகளால் என்பது விஞ்ஞானம் தரும் விளக்கமாகும். இதில் எத்தனை படிப்பாளிகளுக்கு இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழுகின்ற ஏழையாகவே இருக்கக் காணலாம். இங்குள்ள எல்லா நிலைகளுக்கும் உலகம் வழங்கும் மதிப்பீடு மிகக்குறைந்த விழுக்காடாகவே இருக்கக் காணலாம்.
அரசியலும் பிறவும், விஞ்ஞானம் என்றால் அந்த உண்மைகள் இங்குள்ளோர் உள்ளத்தில் ஊறித் திளைத்து உருவம் பெற்றிருந்தால் இங்குள்ள மதமும் மவூடிகமும் மயக்கக் கருத்துக்களும்  மண்டாது மங்கியிருக்கும். அறிவியல் ஆய்வுகளால் விஞ்ஞானம் வழங்கிய எல்லாவற்றையும் பெற்றுத் துய்ப்பவர்கள் அந்த விஞ்ஞான வளர்ந்த அறிவியல் தூய்மைகளை மட்டும் ஏற்பதில்லையென்று முடிவெடுத்து இங்கு உண்மையில் உளவியல் நெறி வளர்ச்சிக்கு கேடு தரும் பழைய கதைகளையே ஆவி, ஆன்மா, அமான்சியம், சொர்க்கம், நரகம், வரம், சாபம், பூசை இவற்றைப் புரிந்தவர்களும் மற்றவர்களிடமும் புரையோடிக் கொண்டிருப்பதை நினைத்தால் மனம் புண்ணாகிப்போகிறது.
இதில் வேதனை என்னவென்றால் தொண்டாகக் கருதி தூய்மை உள்ளத்துடன் நடக்க வேண்டிய கல்வி, மருத்துவம், ஊடகம், தன்னார்வ உணர்வு அனைத்துமே வணிக வலைக்களுக்குள் சிக்கி முழுமையின்றி, முடைநாற்றம் வீசுவதாக அறிவு சார்ந்த அருமையாளர்கள், ஆய்வாளர்கள் அறைந்தவண்ணம் இருக்கிறார்கள்.
இனிவரும் காலங்களிலாவது கெடு நாற்றங்களை நீக்கி நல்ல சமூகத்தைப் படைக்கின்ற நிலைகளுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்வார்களா? இதை உணரவில்லை என்றால் இன்றைய சென்னை வெள்ளம் எல்லா நிலைகளிலும் இருந்தவர்களை அடித்துச் சென்றது. அதுபோல இவர்களையும் வரலாற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிடும். இந்த உண்மையை உணர்வது நலம்.

No comments:

Post a Comment