Saturday 15 August 2015

ஆரியமும் அறிவியலும்

ஆரியமும் அறிவியலும்

மாக்ஸ் முல்லரின் மயக்கத்தில் விளைந்த விளைவு? உலகில் சமஸ்கிருத மொழியும் அந்த மொழிக்குரியவர்கள் ஆரியர்கள் என்ற கருத்து அதில் ஆயிரம் ஓட்டைகள் இருந்தாலும் அவலங்கள் சூழ்ந்திருந்தாலும், ஆய்வுகளில் மாறுபட்டிருந்தாலும் பலரது ஆதரவைப் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

ஓர் அடையாளத்திற்காக ஆரியர், சமஸ்கிருதம் என்று வைத்துக் கொண்டு ஆய்ந்து பார்த்தால் கூட தெளிவான முடிவுகளோ சிந்தனைச் செறிவோ பெரிதும் இல்லை என்பதுதான் உண்மையாகும்.

அண்ணா மொழியில் சொல்வதென்றால் உழைக்காதவர்களை குறிக்கிறது திரு.ஆர்.எஸ். சர்மாவின் பார்வையில் அப்படி ஓர் இனம் இல்லை. நாடோடிகளாக வாழ்ந்தவர்கள் தங்களின் அவசியத்திற்காக ஆங்காங்கே பதிவு செய்த பல பொய்ப் பதிவுகளில் ஒன்றாகும்.

உலக ஆய்வாளர்களின் பார்வையும் பதியும் மாக்ஸ் முல்லரின் கருத்தியலின் பாதையில் நிலை கொண்டிருந்தது. நரம்பு மண்டலத்தில் பெரிதும் இயங்கும் மூளை அதில் தோன்றும் எண்ணம் எண்ணிய வழியில் அதற்கு ஆதரவான நிலைகளை நிறுத்தி வைத்து முடிவு சொல்வது என்பது இயல்பான ஒன்றுதான். அதுவும் ஆர்ப்பாட்டம், ஆரவாரம் விளம்பர உணர்வுகளால் உந்தப்பட்டவர்களின் ஆய்வுகளில் பல உண்மைகள் மறைந்து விடுவதும் இயல்பானதாகும்.

ஆரியம் என்பது ஆதியில் தோன்றியது என்ற அறிவியல் ஆதாரமில்லாத செய்திகளை அலைஅலையாய் பரப்பியவர்கள் இந்த இந்திய வேதமோதிகள்.

இந்தியப் பகுதிபோல உலகில் வேறு எந்தப் பகுதியும் அந்நியர்க்கு அடிமையானதில்லை. ஆனால் எந்த ஆட்சி என்றாலும் அதில் இடம் பிடிப்பது என்பது இந்த வேதியர்களின் தனித்திறனாகும்.

எந்த அரசாலும் தடுக்க, தகர்க்க இயலாத வகையில் அதாவது தாங்கள் கருத்துகளின் வடிவான இந்த ஆலயங்கள் அபிசேக ஆராதனைகளை பாதுகாத்துக் கொள்ளும் வல்லமையும் கொண்டிருந்தார்கள் இந்த இந்திய வேதியர்கள்.

நெடுநாள் நிலைகொண்ட இந்தக் கருத்துகளை வழங்கியவர்கள் மிகச் சிறுபான்மையினர். ஆனால் வரலாற்றுப் பாதைகளில் கல்வி உள்ளிட்ட பல வல்லமை மிக்க நிலைகளில் தங்களை தக்க வைத்துக் கொண்டவர்கள்.

ஆரியர் என்று அறைபவர்களுக்கு மணவாசனை, மனிதப் பாசம், நேசம், நல்லுணர்வு அறம் சார்ந்த அருள், அறிவுடமை எதுவும் இவர்களின் இதழ்களில் வெளிப்படுமே தவிர இதயத்தில் உறைந்திருக்காது.

எந்த இடத்தில் வசித்தாலும் தங்களின் பிழைப்பை மட்டுமே எண்ணிப் பார்ப்பார்களே தவிர இயல்பான இயற்கை உணர்வுகள், நீதி நெறிமுறை, நியாயம் என்பதெல்லாம் பெரிதாகப்படாது.

ஆனால் அறிவியல் என்பது உற்றுப் பார்த்து உண்மைகளை உரைப்பது அனைவருக்கும் பொதுவானது, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இனிமையுடையது. பரிசோதனைப் பாற்பட்டது, பயன்மிகுந்தது. சிந்தனைக் கூர்மையும் மனச் செழுமையும் கொண்டது. ஒட்டு மொத்த உலகத்தையும் உயர்வின் உச்சிக்கு அழைத்து வந்தது. மேலும் மேலும் உச்சி தோன்றினால் அங்கே இட்டுச் செல்வது உயிரினங்களின் துயரத்தை துடைத்தெறிவது.

உண்மை அறிவியல் எது என்று மனித குலம் புரிந்து உணருமேயானால் உணர்ந்ததை வாழ்க்கை வழியாக கொள்ளுவேயானால் இன்னும்பல கோள்களில் மனிதக் குடியிருப்பு தோன்றும்போது உறவுகள் செழிக்கும்.

இன்று வெளியாகும் அறிவியல் முடிவுகளை உற்று நோக்கினால் வெள்ளி, செவ்வாய் கோள்களில் மட்டுமல்லாது சனிக்கோளின் துணைக் கோளான டைட்டானிலும் மனிதன் குடியேறும் நாள் உருவாகும்.

அறிவியல் வளமும் வலிவும் பற்றி எண்ணுகின்றபோது அறிவியலின் அருமை நம்மை ஆளுமை செய்யும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் நூறு அல்லது சற்று அதிகமான மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால் அன்றைய வாழ்க்கை நிலை, வளம் வசதிகள் இல்லாத வறுமையிலேயே குடிகொண்டிருந்தது. ஆனால் அறிவியல் தோன்றி வழி வழியாய் வளர்ந்து வந்தபோது எத்தகைய இனிமைகள் இந்த உலகெங்கும் சூழ்ந்திருக்கிறது... எண்ணிப் பாருங்கள்.

இன்று உலக மக்கள் தொகை எழுநூறு கோடிக்கும் மேல் கூடிவருகிறது. நூறு கோடி மக்களின் வாழ்க்கை நிலையிலிருந்து எத்தனை மடங்கு பெருகியிருக்கிறது என்பது நெஞ்சில் நிறைவைத்தருகிறது.

இந்த நிலை வேத மோதிகளாலோ வேதக்கருத்துகளாலோ உருவானதில்லை. இந்த வேதக் கருத்துக்களை விளைவித்தவர்களை வேரறுத்த விஞ்ஞானிகளால் உருவானதாகும்.

உயிர்க்கொலை குற்றுயிராக்கும் கொடுமை. உடமைகள் பறிப்பு, உடல் ஊனப்படுத்துதல் என்று மன்னர்களின் கடுமையையும், மதவாதிகளின் பொய்மையையும் வேரறுத்து வெளிப்படுத்தியதுதான் விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.

மதங்கள் என்பது ஒன்றையொன்று பார்த்து நகல் படுத்தியதாகும். அதில் ஆரியமானாலும் கத்தோலிக்கமானாலும் மற்ற எதுவானாலும் அறிவு ஆய்வுக்குட்

படாததாகும். அறிவியல் ஆக்கம் நிறைந்ததாகும்.

No comments:

Post a Comment